உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

வலிமிகும் இடங்கள் - Combination in which the Hard

consonants are doubled

பின்வருமிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். 1. 2ஆம் வேற்றுமைக்கும், 4ஆம் வேற்றுமைக்கும் பின். (இங்கு வேற்றுமை யென்றது வேற்றுமை விரியை)

உ-ம்: பாடத்தைப் படித்தான். ஊருக்குப் போனான்.

2. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின் (After the Infinitive Mood). உ-ம். செய்யப் போனான்

விரைவாகப் பேசினான்; வலியச் சொன்னான்.

இங்கு ஆக என்னும் துணை வினை (auxiliary verb) ஆகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த நிகழ்கால வினையெச்சம்.

3. யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சங் (past participle) கட்குப்

4.

பின்.

உ-ம்: போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று.

விரைவாய்ப் போனான்.

விரைவாய் என்பதில், ஆய் என்னும் துணைவினை ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.

தான, தத்த, தாத்த, தனத்த என்னும் சந்த வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின்.

தனி நெடிலடுத்த குறிலாய் வருவது 'தான’ வாய்பாடு.

உ-ம்: ஒடிப்போனான்.

இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது 'தத்த' வாய்பாடு. (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப்பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்.) உ-ம்: தட்டிச் சொன்னான்,

விட்டுக்கொடுத்தான்.

தனிநெடிற்குங் குறிலுக்குமிடையில் வல்லின மெய் வருவது தாத்த’ வாய்பாடு.

உ-ம்: சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான்,

வாழ்த்திக்கொடு, மாற்றிப் பேசு

குறிலிணைக்குங் குறிற்கு மிடையில் வல்லினமெய் வருவது ‘தனத்த வாய்பாடு.

உ-ம்: எடுத்துச்சொல், வருத்திப்பார்

இணை = இரண்டு, சோடு.

இங்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி நிற்பினும் வலிமிகும் விதி தவறா. இது அடுத்த விதிக்கும் ஒக்கும்.