உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

47

ஒருவரைப் பல பெயர்களாற் சிறப்பித்துப் பெயர்தோறும் வினை கொடுப்பின், ஒரு வினைகொடுத்துக் கூறல் வேண்டும்.

உ-ம்: ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக.

இங்ஙனமன்றி, ஐய! வருக, அண்ணால் அமர்க என வேறு வினை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க.

பல தொடர்கள் ஒரு வினைகொண்டு முடியின், தனித்தனி அம் முடிபிற் கேற்றவா யிருத்தல் வேண்டும்.

உ-ம்: ஏசு தாம் உலக முடிவில் இங்குத் திரும்ப வருவதாகவும், தம்மை நம்பினாரெல்லாம் வீட்டைப் பெறுவாரென்றும் சொல்லிப் பரத்திற் கெழுந்தருளினார்.

iv. வாக்கிய முடிபு

முன் முடிபு, பின் முடிபு ‘Loose' and 'Periodic' Constructions ஒரு கலப்பு வாக்கியத்தில், தலைமை வாக்கியத்தை முற்கூறுவது முன் முடிபாம்; பிற் கூறுவது பின் முடிபாம்.

உ-ம்: மாணிக்க நாயகர் கூறுகின்றார், மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லலாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன வென்று

முன்முடிபு.

மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றனவென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார் பின்முடிபு.

முன்முடிபினும் பின்முடிபே சிறப்புடைத்து.

XV. வாக்கிய அளவு

Length of a Sentence

ஒரு வாக்கியம் மிகக் குறிதாயும் மிக நெடிதாயு மில்லாது, வாசித்தவுடன், அல்லது வாசிக்கக் கேட்டவுடன், முழுப்பொருளும் ஒருங்கு தோன்றுமாறு ஓர் அளவா யிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தின் பேரெல்லை பத்து வரியாயிருத்தல் நலம்.

Xvi. வாக்கியவொருமை

Unity of Sentence

ஒரு வாக்கியத்தில் ஒரு கருத்தே யிருத்தல் வேண்டும்.

ஒரு வாக்கியத்தில் பல (தலைமைக்) கருத்துகளிருப்பினும், ஒரே வாக்கியத்திற்கேற்ற செய்தி பல சிறு வாக்கியங்களாக எழுதப்படினும், ஒரு வாக்கியமாவது, அதன் இடைப்பிவைப்பாவது (paranthesis) மிக நெடிதா யிருப்பினும், வாக்கிய வொருமை கெடும். இதையறிந்து கடைப்பிடிக்க.

xvii. ஒருபோகமைப்பு Parallel Construction

ஒரு பெரு வாக்கியத்தின் பகுதிகளான எச்சச் சொற்றொடர்களெல்லாம், ஒரே போங்கான அமைப்பாயிருப்பது ஒருபோகமைப்பாகும்.