உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

303

மரபுரை, 1969 திசம்பர் 24ஆம் பக்கல் வெளிவரச் செய்தவர்கள் திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்களே. அவர்கள் தலையிட்டிரா விடின், அவ்வுரை குறைந்த பக்கம் ஆறு மாதம் பொறுத்தே வெளிவந்திருக்கும். அதனால் எனக்குப் பெரும் பொருளிழப்பும் நேர்ந்திருக்கும்.

இனி, அண்மையில் நான் என் வலக்கண் படல அறுவை செய்து கொண்டபோது, இருகிழமை படுக்கையும் உணவும் மருந்தும் விடுத்தும் ஊர்தியனுப்பியும் உதவியதை ஒருபோதும் மறவேன். என் நூல் வெளியீட்டிற்கு என் உடல் நலமும் இன்றி யமையாதலின், இதையும் இங்கே கூற வேண்டிதாயிற்று.

இங்ஙனம் பல்வகையிலும் என் தமிழ்த் தொண்டை இயல் வித்து, மும்மொழிப்புலமை செம்மையிற் பெற நிறைபுல முடியாம் மறைமலையடிகளும் என்னை உளமுவந்து பாராட்டு மாறு செய்த திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க் கழக உறுப்பினரையும் ஏனைத் தமிழன்பரையும், என்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும், அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும், இன்னும் கழிபல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவரவர்கள் தங்கள் செந்தமிழ்த்தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று, ஆர்வத்துடன் வேண்டிக் கொள்வதேயன்றி வேறன்று.

சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி

தெய்வத் திருவள் ளுவம்வாழி- செய்வெற்றச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடுழி தப்பாது வாழி தமிழ்.

செய்-செயல்; வெற்றம்- வெற்றி.