உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




386

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வெள்ளை நிறத்தினும் வெடிப்பொலிச் சொல்லினும் விண்ணவர் நிலையை விளம்பி யேமாற்ற.

பகுத்தறி வைப்பயன் படுத்தாது வைத்தே மதவியற் பித்தமும் மடவியற் கொடையும் பழங்குடிப் பிறப்பொடு பேதைமை யூட்ட நிலத்தேவ ரென்னும் நெடும்பொய் நம்பி அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும்

அஃறிணை யாயினீர் அனைத்தும் இழந்தீர். எஞ்சி யிருப்பது செஞ்சொல் தமிழே

அதனை யேனும் அழியாது காப்பீர்

முதலிரு கழக நூல்களுள் எதுவும் இதுபோ துண்டோ ஏனிலை ஆய்மின் ஆரிய மொழியில் அனைத்துமொழி பெயர்த்தபின் அருந்தமிழ் முதனூல் அழியுண் டனவே ஆங்கில அரசும் அம்மொழிக் கல்வியும் நயன்மைக் கட்சியும் மறைமலை யடிகளும் அறிவுறுத் தியபினும் சிறிதும் திருந்தீர் அறுப்பானை நம்பும் ஆடுகள் போல வெறுப்பானை யின்றும் விரும்பித் தொழுதீர் புறநாட் டகத்தே வேர்ப்பான் பகைமை வெளியிட் டுடனே வேறாதல் வேண்டும் இதுதமி ழகமே இதில்கலை தமிழே ஆரிய மென்னும் பூரிய மொழியை அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர் கோயில் வழிபாடும் கொண்டாடு மனமும் வாயில் மொழிதமிழ் வழங்குதல் வேண்டும் விண்ணக மொழியும் விண்ணக மாந்தரும் மண்ணகம் வழங்கும் முறைமை இல்லை சிவனியம் மாலியம் எனுமிரு மதங்களும் செந்தமி ழோரே கண்ட நெறியாம் என்ன பெயரும் இன்றமி ழாக்கிக் கன்னித் தமிழின் கற்பைக் காமின் உங்கள் போன்றே உடலும் உறுப்பும்