32
பாவாணர் கடிதங்கள்
பாடல்கள்
"மறைமலையடிகட்குப் பின் தமிழ்த் தூய்மைபேணும் பேராசிரியன் யான் ஒருவனே என்பது தங்கட்குத் தெரியும். தமிழ்ப்பற்று என்பது தமிழ்த் தொண்டனைப் போற்றுவதே.”13 இனிமேல்தான் என் மொழியாராய்ச்சி உலகிற்கு வெளி யாகும். அதனால் தமிழ் ஓங்கும், கழக நூல் விற்பனையும் உயரும்”.14
66
“என் புலமையைப் பொறுத்த வரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ முன்னுரையோ வழங்கத் தக்கவர்
2915
"என் ஆராய்ச்சி முடிந்து விட்டதனால், இனிமேல் என் வாழ் நாளெல்லாம் இடைவிடாது நூல் எழுதிக்கொண்டே இருப்பேன். யான் எழுதியவை பிறரால் எழுதப் பெறும் திறத் தனவல்ல’
2216
“என் காலத்திற்குப்பின் வேறெவரும் என்போல் எழுதவும்
முடியாது
9917
"சிலப்பதிகாரச் சிறப்பு என்னும் என் ஆராய்ச்சி நூலில் எல்லாம் வெள்ளிடைமலையாய் இருக்கும். அதன்பின் மாற்றுக் கருத்திற்கு இடமேயிராது”18
"உண்மையில் அயலிடத்திற் பெருங்கூட்டத்திற் காத் திருந்து கல்வி அறிவில் தாழ்ந்த அமைச்சரைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அம்மையாருக்காகத்தான் பார்க்க விரும்பு கிறேன். அதுவும் வீணாயின் எனக்கு மனவருத்தம் மிகுதி யாயிருக்கும். மானக்கேட்டுணர்ச்சியும் தோன்றும்
19
"தமிழ்ப் பற்றுள்ளவர்தான் என் நூல்களை
முடியும்”20
66
வாங்க
‘அரசு (அகர முதலிக்கு) முதலில் 50 பக்கம் போலிகை (மாதிரி) எழுதி அனுப்புக என்று சொல்லிப் பயனில்லை. அது என்மீது நம்பிக்கை இன்மையைக் காட்டுவதாயும், அவமதிப்ப தாயும் இருக்குமாதலால் அது நான் செய்யேன். அமைச்சர் கலந்து கொண்டால் மாநாடு சிறக்குமென்றோ மாபெருங் கூட்டஞ் சேருமென்றோ கருதுபவருள் நான் ஒருவன் அல்லேன்.21
139-11-56 (வ.சு) 15.28-12-50 (வ.சு) 17.8-8-64 (மி.மு.சி.) 19.10-7-68 (மி.மு.சி) 21.16-10-69 (த.கு.)
14 9-11-56 (621.5) 16.17-12-51 (வ.சு) 18. 30-5-64 (மி.மு.சி) 20. 23-10-68 (மி.மு.சி)