உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

பிராமண வுண்டிச்சாலைகளில், முதலில், தமிழர் தலைவாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர் மறைவான உள்ளறையிலும் படைக்கப்பட்டனர். அன்று, பிராமணர் எச்சிலையினின்று கறிவகை கள் எடுத்துத் தமிழர்க்குப் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.இதை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் கண்ணாரக் கண்டு, தாமரைத் திரு. வ. சுப்பையாப் பிள்ளையிடம் சொல்லியிருக் கின்றார். நாகர்கோவில் வாணரான ஆறுமுகம் பிள்ளை என்னும் தொடக்கப்பள்ளி யாசிரியர், ஒரு பிராமண வுண்டிச்சாலைக்கு உண்ணச் சென்றபோது, இத்தகைய இழிசெயலைக் கண்ணாரக் கண்ட அவருடைய பிராமண நண்பர், அவரை உண்ணவேண்டாவென்று தடுத்ததாக, அவர் காலஞ் சென்ற பர். இராசமாணிக்க னாரிடம் சொல்லியிருக்கின்றார். தில்லை இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. சாமிநாத முதலியாரும்,அவர் தந்தையார் ஒரு பிராமணர் வீட்டில் இத்தகைய இழிநிலைக்கு ஆளாகவிருந்து தப்பியதாக என்னிடம் சொன்னார்.

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தில்லையில் ஒரு பிராமண உண்டிச்சாலையில், 'பிராமணர்க்கு மட்டும்' என்று ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.

நான் 1928-லிருந்து 1934 வரை இராசமன்னார்குடியி லிருந்த போது, கீரங்குடிக் கோபாலையர் உண்டிச்சாலையில், தமிழர்க்கு எடுப்புச் சாப்பாடும் இல்லாதிருந்தது.

وو

وو

99

தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும், பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, “என் குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது என்றும், “எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக் கூடாது என்றும், “மேலா 'மேலாடையை வல்லவாட்டாக அணியக் கூடாது என்றும், "திருமண வூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது என்றும்,“குடை கொடி பிடிக்கக்கூடாது” என்றும், பலவாறு பிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர். வலங்கை இடக்கை வழக்காரம்

விருதுச்

குலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலிய சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்லவாட்டு, செருப்பு ஆகியவைபற்றிக் குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர்கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

66

காவிய மாகிய காமீகங் கண்டுகங் காகுலத்தோர் ஓவிய பாத்திர ராக விருபத்து நான்குயர்ந்த