உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மேவிய கோட்டத் திலுங்கரி கால வளவன்மிக்க

வாவிய மேன்மை கொடுத்தளித் தான்றொண்டை மண்டலமே" என்பது, 17ஆம் 18ஆம் நூற்றாண்டிலிருந்த படிக்காசுப் புலவர்

பாடியது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் வலங் கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது.

இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும், டங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருத இடமுண்டு.

சோழராட்சிக்குப்பின் பல்வே றரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக்குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக்காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்தது. 1809ஆம் ஆண்டு சூலை மாதம் 25ஆம் பக்கல், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத் தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (George Colman) துரை, அவ் வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ் செய்தார்.

வலங்கைக் குலங்கள்

வேளாளன்,

அகம்படியான்,

டையன், சாலியன்,

பட்டணவன், சான்றான்,

குறவன், குறும்பன்,

வள்ளுவன், பறையன் முதலியன.

இடங்கையினும்

இடங்கைக் குலங்கள்

கம்மாளன்,

பேரிச் செட்டி,

நகரத்துச் செட்டி,

கைக்கோளன், பள்ளி (வன்னியன்),

வேடன், இருளன், பள்ளன்,

இரட்டைமாட்டுச் செக்கான் முதலியன.

வலங்கை பெருங்கை. மேளகாரன்,

கணிகை (தாசி), பணி செய்வோன் முதலிய குலங்களில் இருகையு முண்டு. ஒருசில குலங்களில் ஆடவர் ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னட நாடுகளிலும் நாடுகளிலும் இவ் வகுப்புகள் இருப்பதால், அந் நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடா யிருந்தமை அறியப்படும்.

"இத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை வலங்கையார் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்