உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

66

இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.

99

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்(கு) இரவி னிளிவந்த தில்.

99

நக்கீரர் தமிழ்ப் பெருமை காப்பு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு)

66

சீரிய

ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா.

99

நாற்பால்பற்றி ஒளவையார் சோழனுக்குக் கூறியது (தோரா. 12ஆம் நூற்.)

66

(குறள்.1035)

(குறள்.1066)

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் – நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு

99

தமிழிலக்கணச் சிறப்பை எடுத்துரைத்த முனிவர்

66

99

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. என்று பாடினார், திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் (16 ஆம் நூற்.).

தென்மொழியின் தாழ்வு நீக்கிய முனிவர்

'இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ

99

என்று பாடி, வடமொழியையும் தென்மொழியையும் சமப்படுத்தி யவர் சிவஞான முனிவர் (16 ஆம் நூற்.)

ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும்

ஆங்கிலராட்சி,18ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இவ் விரு பதாம் நூற்றாண்டிடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களிலும், பெருஞ்சாலைகளிலும், பொதுவிடங்களிலும்,புகைவண்டிகளிலும், மின்வண்டிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொது வாயிற்று. எல்லாத் துறையிலும் பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வியின்றி,