141
அஃதாவது எழுத்துஞ் சொல்லுஞ் சொற்றொடரும் ஆகிய மூவகை யுறுப்புகளைக் கொண்டதாக மொழி அமையுமுன், ஆ ஈ ஊ என்பன சுட்டொலிகளாகவே யிருந்து, பின்னர்ச் சுட்டெழுத்துகளாயின. எழுத்து நிலையிலும், உண்மையில் அவை ஓரெழுத்துச் சுட்டுச் சொற்களே. ஓரெழுத்தாயினும் பலவெழுத்தாயினும், பொருள் தருவனவெல்லாம் சொல்லேயாம்.
முதற்காலக் குமரிமாந்தர், இதழகற்றிச் சேய்மை சுட்டியும், இதழைப் பின்வாங்கி அண்மை சுட்டியும், இதழ்குவித்து இடை டைப் பட்ட முன்மை சுட்டியும் ஒலித்த ஒலிகளே, முறையே ஆ ஈ ஊ என்பனவாம். அவை சுட்டுச் சைகைகளோடு கூடியதனாலேயே, இன்றும் தவறாது மூவிடத்தையும் குறிக்கின்றன. ஆரியமக்கள் இதை யுணராமையால், அவர் வாயிற் சுட்டொலிகள் பலவாறு திரிந் துள்ளன. அதனால், அவர் மொழிகளிற் சுட்டுச் சொற்களே யன்றி, அவற்றிற்கு அடிமூலமான சுட்டெழுத்துகளில்லை. தமிழர் குமரிமாந்தரின் நேர்வழியினராதலால், முச்சுட்டொலிகளும் தமிழில் தம் இயல்பு மாறாதிருக்கின்றன.
முச்சுட்டொலிகளினின்றே மூவிடப் பெயர்கள் தோன்றி யுள்ளன. படர்க்கைச் சுட்டுப்பெயர் போன்றே, தன்மை முன்னிலைப் பெயர்களும் சுட்டுப்பெயர்களே யாம். தன்மையிலும் முன்னிலை யிலும் சுட்டுப் பெயரன்றி வேறின்மையால், தன்மைச் சுட்டுப் பெயரும் முன்னிலைச் சுட்டுப் பெயரும் தன்மைப் பெயரென்றும் முன்னிலைப் பெயரென்றும் சுருக்கிச் சொல்லப்படுகின்றன.
பன்மை
மூவிடச் சுட்டுப் பெயர்கள் முதல் நிலை: படர்க்கை
தன்மை
முன்னிலை
ஒருமை ஆன் ஈன் - ஏன்
ஊன்
ஆம்
ஈம் - ஏம்
ஊம்
குறிப்பு : ஒருமை குறிக்கும் னகரமெய் ஒன் (ஒன்று) என்பதன் முதற்குறையும், பன்மை குறிக்கும் மகரமெய் உம் என்பதன் முதற்குறையும் ஆகும். உம்முதல் கூடுதல்.
2 ஆம் நிலை: படர்க்கை
தான்
தாம்
தன்மை
யான்
யாம்
முன்னிலை
நூன்
நூம்
3 ஆம் நிலை: படர்க்கை
அவன்
அவள்
அவர்
அது
அவை
தன்மை
நான்
நாம்
முன்னிலை
நீன்
நீம்