பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இராகம்:- இந்தோளம் வட்டங் கொடுத்த நிலவோ எனத்தக்க மாமுகத்தாள் சட்டங் கொடுத்தும் புவியாவும் ஆண்டிடும் சக்கரத்தாள் இட்டங் கொடுத்தும் எலாங் கொடுத்துங் காளமேகமெனும் பட்டங் கொடுத்து நடந்தாள் பெரிய பதம் கொடுத்தே. சூரியனைப் பார்த்து. இராகம்:- தோடி நாணுகின்றேன் என்று தன்முகங் காட்டிடும் நங்கையைப்போல் பேணுகின்றேனென் றலைமீ துதிக்கின்ற பேரொளியில் பூணுகின்றேனென்று பொன்னாடை பெற்றனள் பூ, மடந்தை காணுகின்றேன் அதில் என்னன்னை முக்கணிற்கண் ஒன்றையே. காளமேகம். - இராகம்:- &ಿಕF_f தானம்:- ஆதி கொஞ்சும் கிளிகள் பார் கீதங்கள் கேள் கோதை மோசனா நீ வஞ்சமாகிய பூலோக வாழ்வில் நல்வாழ்வு காதல் வாழ்வன்றோ தங்கிய இன்ப உலகில் சஞ்சரிக்க நீ வாடி பொங்குதேயடி ஆனந்தம் பூங்காவனக் குயிலே மயிலே (கொஞ்சும்)