23
இராகம்:- இந்தோளம்
வட்டங் கொடுத்த நிலவோ எனத்தக்க
மாமுகத்தாள்
சட்டங் கொடுத்தும் புவியாவும் ஆண்டிடும்
சக்கரத்தாள்
இட்டங் கொடுத்தும் எலாங் கொடுத்துங்
காளமேகமெனும்
பட்டங் கொடுத்து நடந்தாள் பெரிய
பதம் கொடுத்தே.
சூரியனைப் பார்த்து.
இராகம்:- தோடி
நாணுகின்றேன் என்று தன்முகங் காட்டிடும்
நங்கையைப்போல்
பேணுகின்றேனென் றலைமீ துதிக்கின்ற
பேரொளியில்
பூணுகின்றேனென்று பொன்னாடை பெற்றனள்
பூ மடந்தை
காணுகின்றேன் அதில் என்னன்னை
முக்கணிற்கண் ஒன்றையே.
காளமேகம்.
இராகம்:- கனடா
தாளம்:- ஆதி
கொஞ்சும் கிளிகள் பார் கீதங்கள் கேள்
கோதை மோகனா நீ
வஞ்சமாகிய பூலோக வாழ்வில்
நல்வாழ்வு காதல் வாழ்வன்றோ
தங்கிய இன்ப உலகில்
சஞ்சரிக்க நீ வாடி
பொங்குதேயடி ஆனந்தம்
பூங்காவனக் குயிலே மயிலே
(கொஞ்சும்)