பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அங்ஙனம் கூறுவதால் புதிய அழகும் தோன்றுகின்றது. “தாமரை முகம்” என்று கூறும்பொழுது இரண்டு. சொற்களாக விட்டிசைப்பதையும்'முகத்தாமரை” என்னும்பொழுது ஒருசொல்லாகி இரண்டினைச் சார்ந்த தனித்தனி உணர்ச்சிகளும் ஒருங்கிணைந்து ஆற்றல் மிக்க உணர்ச்சியாய் வளர்வதையும் காணலாம். இதைத்தான் “உருவகம்” என வழங்குகின்றனர். பால் செறிந்து பனிப் பாலாடை (Ice-cream) 2,81gi போலவும், கரும்புச் சாறு கற்கண்டாக ஆவது போலவும் அடங்கிச் செறிந்த உவமையே உருவகம் ஆகின்றது: இவ்வளர்ச்சியால் கவிதை பெறும் பயன் பெரிது. கவிஞன் ஒரே கல்லில் அனைத்தையும் பெற விழைகின்றான்; திறமை மிக்க கவிஞனாயின் அதில் வெற்றியும் பெறுகின்றான்.

மன்னர் விழித்தாமரைபூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்புக்காள்’ என்ற அடிகளில் தமயந்தி, சுயம்வரம் நாள் அன்று ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும், நளன் உருக்கொண்டு வந்திருந்த நான்கு தேவர்களும் விழித்த கண் இமையாது காத்திருக்கும் கொலுமண்டபத்திற்கு வருவதைப் புகழேந்தி வருணிக்கின்றார். இதில் “விழித்தாமரை பூத்த மண்டபம்” என்ற உருவகத்தில் காட்டும் காட்சியினை எண்ணிக் களிக்கவேண்டும். இங்கு உவமை சுருங்கி அடங்கி உருவகமாக வெளிப்படுவதால், அந்த அடக்கத்தில் புதிய ஆற்றலும், சுவையும் பிறப்பது ஒரு விந்தையேயாகும்.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பாரதிதாசன் கையாளும் உவமைகளைக் காண்போம்.

உவமைவிரி: பாரதிதாசனின் உவமைகள் தனித்தன்மை வாய்ந்தவை. பரம்பரையாகப் புலவர்கள் கையாண்ட உவமைகளைச் சற்றுப்புதிய போக்கில் அமைப்பதிலும்,இதுகாறும் எவரும் கையாளாத பாங்கில் உவமைகளை அமைத்துக் காட்டுவதிலும் இத்தனித் தன்மையைக் காணலாம். சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

3. Metaphoris rothingbut compressed simile - M.R. Ridley in his “Poetry

and the Ordinary Reader” - Page 64 4. நளவெண்பா - 131