பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 v பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஏற்படுகின்றன. ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது இவ்வகைத் தூண்டல்களே நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியைத் தருகின்றன.

எந்த மொழியும் குறியீடுகளால் ஆனது. சொற்களே அந்தக் குறியீடுகள் (Symbols), அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஆகையால், அவை தூண்டலை எழுப்பும் அடையாளங்கள் (Signs). நம்முடைய கண்கள் அச்சிட்ட கவிதையின் சொற்களைப் பார்க்கின்றன: கவிதையை வாய்க்குள்ளும் படிக்கின்றோம்; வாய் விட்டும் படிக்கின்றோம். கண்ணின் மூலமும், காதின் மூலமும் ஏற்படும் தூண்டல்கள் நம் மூளையை அடைகின்றன. நாம் கவிதையின் பொருள்களை அறிகின்றோம். நம் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. இவை தம்மொடு தாமாகக் கலந்து தொகுதிகளாகிப் பிற எண்ணங்களுக்குக் குறியீடுகளாக அமைகின்றன. இவை யாவும் பெருமூளையின் புறணியில் நடைபெறுபவை. நம் மூளையிலுள்ள ஒரு பகுதியாகிய மேற்பூத் தண்டு (Hypothalamus) உள்ளக் கிளர்ச்சி நிலையில் பங்கு கொள்கின்றது என்பதை ஆய்வுகளால் கண்டறிந்துள்ளனர். உள்ளக் கிளர்ச்சியற்றிப் பல கொள்கைகளும் எழுத்துள்ளன.இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து எண்ணினால் ஒர் உண்மை புலனாகின்றது. கவிதையைப் படித்து அதிலுள்ள செய்திகளைப் பெருமூளை அறிந்ததும், அங்குத் தோன்றும் எண்ணங்களும் எண்ணக் கோவைகளும் மேற்பூத் தண்டைத்துாண்டி அதன் மூலம் தன்னாட்சி நரம்பு மண்டலத்தை (Automomous nervous system) இயக்குகின்றன. இம்மண்டலத்தின் இயக்கத்தால் கரப்பிகன் தூண்டப்பெற்று அவற்றின் சாறுகள், குறிப்பாக மாங்காய்ச் காப்பிகளின் (Adrenal glands) சாறுகள், குருதியோட்டத்தில் கலந்து உடலெங்கும் உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன. வாழ்க்கையதுபவத்தில் இவ்வுணர்ச்சிகள் ஏற்படுங்கால் இத்தகைய உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது உளவியல் காட்டும் உண்மை. வெகுளிச்சுவை, அவலச் சுவை, மருட்கைச் சுவை போன்ற கவைகள் உள்ள கவிதைகளைப் படிக்கும்பொழுது அவற்றால் பெறும் செய்திகள் பெரு மூளையில் பல்வேறு எண்ணக் கோவைகளை எழுப்பி மேற்குறிப்பிட்ட நிலைமைகளை உண்டாக்குகின்றன என்று