கற்பனைத்திறன் Y 57
இயற்கை இயம்பும் பாடலாகக் கவிஞர் கூறுவது.
பண்டங்கள் பெருக்குவதின் மூலம் நாட்டில்
பணக்காரன் கரண்டுகின்றான், வறுமை நோயை எண்டிசையும் பரப்புகின்றான், இதற்கு மாறாய்
இயற்கைவிளை பொருள்கள் நமைச் சுரண்டல்
இல்லை, “நண்பர்களே, உமக்குண்மை ஒன்று சொல்வேன்;
நானிலத்தில் வளர்ந்துபயன் விளைத்த போதும் கொண்டெவற்றையும்நாங்கள் தின்ப தில்லை
கொழுப்பதில்லை; கொடுக்கின்றோம்
உலகத்தோர்க்கே. என்றன்முன் விளைத்தபல புல்லும் ஏனை
எழுந்தசெடி, கொடிமரமும் இயம்பக் கேட்டேன்; நன்றிதனை நாடெங்கும் சொல்லுகின்றேன்;
நாட்டில்பொதுவுடைமைக்கு வித்தீ தென்றேன்; கொன்றொழிக்கும் முதலாளி என்றில் லாமல்
கூட்டுடைமை பயன்மரமாய், இயற்கை அன்னை அன்புயிராய், தொழிலியலை மாற்றல் வேண்டும்;
அதற்குப்பின் துன்பில்லை; சுரண்டல் இல்லை.”
இயற்கையில் தாம் கண்ட உண்மைகளை பொதுவுடைமைக் கொள்கையுடன் இணைத்துக் காட்டுவதில் இயைபுக் கற்பனையைக் காண முடிகின்றது.
இன்னோர் எடுத்துக்காட்டு:
மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
8. குயில் பாடல்கள் - பக்கம் 77