பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நினைவில் நின்றவை சென்னைக்கு வந்து படத்துறை முயற்சிகளை மேற்கொண்டது.தவறு என்று 1964ஆம் ஆண்டு துவக்கத்தில் பாவேந்தர் உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு படத்துறைக்கு வந்தும் பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்காமல் இவ்வளவுநாள் தம் முயற்சியையும், உழைப்பையும், காலத்தையும் பாழடித்து விட்டோமே என்று வருந்தியிருக்க வேண்டும். வயது முதிர்ச்சியும் தள்ளாமையும் அவரை அச்சுறுத்தவே, விரைவில் பாரதியின் வரலாற்றை எழுதி அதைத் திரைப்படமாக்கிவிட வேண்டும் என்று எண்ணியிருப்பார். இந்த அவசரத்துண்டுதல் அவரைக் கடுமையான உழைப்பில் தள்ளியது. இரவு பகலாக விழித்திருந்து மகாகவி பாரதி'யின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதி முடித்தார். கடுமையான உழைப்பும், மன அமைதியின்மையும் அவர் வாழ்வை முடித்துவிட்டன. 21.4.64 சென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சென்னையிலிருந்து என் தம்பி இளங்கோவன் எழுதியிருந்தான். மாரடைப்பினால் தாக்கப்பட்டுச் சென்னை அரசாங்க மருத்துவமனையில் பாவேந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று இரவு சென்னை செல்லுவதற்கு வேண்டிய முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். எதற்கும் மாலைச் செய்தித் தாளைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினேன். சேலம் மாலை முரசில் பாவேந்தர் இறப்பைப் பற்றிய செய்தி கொட்டையெழுத்தில் அவர் படத்தோடு போடப் பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்காக அன்று மாலை அவர் சடலம் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்படும் என்ற செய்தியும் வெளியாகி யிருந்தது. உடனே கடலூர் மார்க்கமாகச் செல்லும் புகை வண்டியில் ஏறிப் புதுவை புறப்பட்டேன். அடுத்த நாள் காலை 8 மணியளவில் புதுவையை அடைந்தேன். புதுவை நகரமே வெள்ளக்காடாக இருந்தது. பெருமாள் கோயில் தெருவில் எள் விழ இடமில்லை. பாவேந்தர் வீடு தொட்டிக்கட்டு வீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென் வடலாகப் பாவேந்தர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி மாலைகளும் மலர் வளையங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. பாவேந்தரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதத்தைக் கண்ணிரால் நினைத்துக் கொண்டிருந்தனர். நடிகர் எம்.ஆர்.ராதா உள்ளே வந்து பாவேந்தருக்கு மாலையணிவித்துத் தம் இறுதி வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். பாவேந்தர் மகன் கோபதி அருகிலிருந்த சுவரில் தலையை மோதிய வண்ணம், பாவிகளா! சினிமா ஆசையைக் காட்டி எங்கப்பாவைக்