பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் e 爆 163 என் தந்தையார் சிந்தனையில் மூழ்கி மும்முரமாக எழுத்து வேலை யில் ஈடுபட்டிருக்கும் போது நாங்கள் திண்டாடிப் போவதுண்டு. சற்று நேரத்துக்கு முன்தான் சாப்பிட்டு முடித்திருப்பார். திடீரென்று ‘பாப்பா!' என்று குரல் கொடுப்பார் நான் எழுந்து ஒடுவேன். என்னைப் பார்த்து என்னம்மா! நான் சாப்பிட்டுட்டனா? என்று கேட்பார். சில சமயம் தட்டில் உணவு பரிமாறியிருந்தால் அப்பளத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போய்ப்படுத்துக் கொள்வார். கொஞ்ச நேரங்கழித்து, "என்ன பண்றிங்க எல்லாம்? நா பசியோட கிடக்கற!” என்று சத்தம் போடுவார். சில சமயம் பாதி சாப்பிட்ட நிலையில் கைகழுவி விட்டு எழுந்து விடுவார். குளிப்பதற்காகக் குளியல் அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, உட்காரும் பலகையும், செம்பையும் அருகில் வைத்த விட்டு அவருக்கு நாங்கள் அறிவிப்பது வழக்கம். என் தந்தையார் குளிப்பதற்கு உள்ளே செல்லுவார். கொஞ்ச நேரம் பலகையில் மெளனமாக் அமர்ந்திருப்பார். பிறகு வெந்நீரை ஒரு கையால் மொண்டு மொண்டு காலில் ஊற்றிக்கொண்டு மற்றொரு கையைச் சுண்டித் தாளம் போட்டுக் கொண்டிருப்பார். தாளச் சத்தத்தைக் கேட்டதும் என் தாயார், போய்ப் பாரும்மா! சிட்டிகை வருது” என்று கூச்சல் போடுவார். சிலசமயம் சென்னையிலிருந்து அவசரமாக வீடு திரும்பும்போது இரவுநேரமாக இருக்கும். வீட்டில் அவருக்கு ஏற்ற உணவு இருக்காது. சோற்றைப்போட்டு இரசத்தை ஊற்றி அப்பளத்தைப் பொரித்து வைப்பார் என் தாயார். சோற்றை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு அப்பளத்தைக் கடிப்பார். பிறகு துவென்று துப்பிவிட்டு அப்பளம் கசக்குது என்று கூப்பாடு போடுவார். சாப்பாட்டுக் கிண்ணி மேலே பறக்கும். பிறகு என்னைக் கூப்பிடுவார். அப்பளம் ரசத்துக்குக் கசக்கும். அது என் தாயார் கவனத்துக்கு வருவதில்லை. நான் மீண்டும் போய்ப் பருப்புத் துவையல் அரைத்துக் கொடுத்து சமாதானம் செய்தால்தான் சாப்பிடுவார். பருப்புத் துவையலோடு அப்பளத்தைத் தொட்டுச் சாப்பிடச் சொல்லுவேன். ஆமாம்மா இப்பத்தான் நல்லாருக்கு” என்பார் தந்தை. இரவு நேரங்களில் எழுதும்போது நிறைய ரொட்டியும் ஜாமும் வேண்டும். காலையில் அவர் அறைக்குள் நுழைந்தால் சிகரெட்டு துண்டும், சாம்பலும், நெருப்புக் குச்சியுமாகக் கிடக்கும். அவர் எழுதிய கையெழுத்துப் படிகளும் இறைந்து கிடக்கும். சில சமயம் அவர் கையெழுத்துப் படிகளை எடுத்துப் பார்த்தால் ஒன்றின்மேல் ஒன்று ஏறியிருக்கும்.