பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நோபிள் பரிசு கிடைத்திருக்கும் சந்தித்தபோது, பாவேந்தரைப் பற்றிப் பேச்செழுந்தது. பாவேந் தரைப் பற்றி அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். "நான் அவர் கவிதைகளைப் படித்திருக்கிறேன். குறிப்பாக அவர் எழுதியுள்ள அழகின் சிரிப்பு என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவருக்கு ஆங்கிலம் தெரியாத குறை: தெரிந்திருந்தால் நோபிள் பரிசு கிடைத்திருக்கும். பாரதி சிறந்த தேசிய கவி என்பதில் ஐயமில்லை. ஆனால் இளங்கோ கம்பருக்குப் பிறகு பாரதிதாசன்தான். சென்னை வந்தால் ஒருமுறை அழைத்துவா!' என்றார். திரு.குமாரசாமி ராஜா கூறியதை அடுத்தமுறை சந்தித்தபோது பாவேந்தரிடம் கூறினேன். சென்னையில் இருக்கும்போது பாவேந்தரும் நானும் குமாரசாமி ராஜாவை ஒருநாள் சென்று பார்த்தோம். அப்போது ஜெயின்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். பாவேந்தரைக் கண்டதும் கட்டித் தழுவிக் கொண்டார். கல்லூரி நிகழ்ச்சியைக் சற்று நேரம் ஒத்தி வைக்கும்படி தொலைபேசியில் கூறிவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். "உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் உங்கள் அழகின் சிரிப்பிலும், குடும்ப விளக்கிலும், பாண்டியன் பரிசிலும் என் உள்ளத்தைப் பறிகொடுத்தேன்" என்று குறிப்பிட்டார். நான் கொஞ்ச காலம் கல்கி, தினத்தந்தி பத்திரிகைகளின் விற்பனை ஏஜென்டாக இருந்தேன். எனவே கல்கி கிருஷ்ணமூர்த்தியிடம் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. ஒரு நாள் கல்கி என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “பாரதி படைப்புகளில் பாஞ்சாலி சபதந்தான் வேகம், பாரதிதாசன் பாட்டு வரிக்கு வரி வேகம். அவர் சார்ந்துள்ள இயக்கம் அவரைக் குடத்து விளக்காக ஆக்கியுள்ளது" என்று குறிப்பிட்டார். கடலூர் திருக்குறள் அச்சக (திருக்குறள் முனுசாமியுடையது) முகவரியிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படி பாவேந்தர் ஒருநாள் தந்தியடித்திருந்தார். ஏதோ முக்கியமான அலுவல் போலிருக்கிறது என்று எண்ணி நானும், என் மனைவி பூபதியும் புறப்பட்டோம். கையில் அப்போது போதிய பணமில்லாததால் கடன் வாங்கிக் கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்டோம். கடலூர் திருக்குறள் அச்சகத்துக்குப் போனபோது பாவேந்தர் முதல்நாளே புதுவை சென்றுவிட்டதாகச் சொன்னர்ர்கள். உடனே புதுவைக்குப் போனோம். புதுவை வீட்டில் பாவேந்தரைச் சந்தித்ததும் ஒன்றும் அவசரமான வேலை எதுவுமில்லை. கொஞ்சம் worried ஆக