பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/118 விட்டது போலும். அவரது விருப்பத்துக்கு மாருகத்தான் யாரும் பேசக்கூடாதே! நான்கு நாட்கள் கழித்து மிகவும் சூடாகப் பாவேந்தரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: - 5–13–63 அன்பு முருகுசுந்தரம்! நான் உனக்கு அஞ்சல் எழுதியுள்ளேன். அது கிடைத் திருக்கும். இப்போதும் சொல்லுகிறேன். நான் சென்னையில், சேலம் எக்ஸ்பிரஸில் காலை 74க்குப் புறப்பட்டு 8-11-63 மாலை 44 மணிக்குச் சேலம் வந்து சேருகிறேன். என் நண்பர் ஒருவரும் என்னுடன் வருவார். கூடுமானல் சந்திக்கவும். மற்றவை நேரில்! பாரதிதாசன் தாம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடியே 8-11-63 மாலை 44மணிக்கு அரசாங்க விரைவு வண்டியில் சேலம் பேருந்து நிலையத்தில் வந்து இ ற ங் கி ைர். நானும் புலவர் மி.மு. சின்ளுண்டாரும் வேறுசில நண்பர்களும் மாணவர் கூட்டத்தோடு மாலையும் கையுமாகக் காத்திருந்தோம். தக்கமுறையில் பாவேந்தரை வரவேற்று வசதியான ஒரு தங்கல்மனையில் கொண்டுபோய்ச் சேர்த்தோம். நான் சென்னையில் இருந்தபோது ஒரு முறை சேலம் வரும்படி அவரை வேண்டிக் கொண்டேன். உ ட னே அவர் *வரலாம்...... என்னை உன்னல் வைத்துச் சமாளிக்க முடி யாது’ என்று சொன்னர். அவர் அவ்வாறு சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது. தன் விருப்பம் கடுமையாக மறுதலிக்கப் பட்டால் ஒரு குழந்தை தன் பெற்ருேர் முகத்தை எவ்வாறு பார்க்குமோ அவ்வாறு அவர் முகத்தை நான் பார்த்தேன். பாவேந்தர் சேலம் வரும் செய்தி கடிதம் மூலம் என்னை வந்தடைந்ததும் அவர் சென்னையில் சொன்ன இச்சொற்கள் தாம் முதலில் என் நினைவுக்கு வந்தன.