பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/87 உதறும் துணிச்சலும், பிறர் என்ன நினைப்பார்கள் என்ப தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்யும் உள்ள உறுதியும் மிகவும் பிடித்தன. உண்மையி லேயே பாரதியாரின் இப்பண்புகள் அப்போது இளைஞ ஞன என்னை மிகவும் வசீகரித்தன. பள்ளி நேரம் போக ஓய்வு நேரங்களில் பாரதியாரோடு இருப்பேன். அரவிந் தர், வ.வெ.சு. அய்யர், பாரதி ஆகியோர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் பேச்சில் அடிபடாத செய்தி எதுவுமில்லை. நான் அருகில் அமர்ந்து அவர்கள் பேசுi தைக் கேட்டுக் கேட்டு எவ்வளவோ தெரிந்துகொண்டேன். பாரதியார் எதைப் பேசினலும் ஒரு கவிஞனுக்குரிய மிடுக் கோடுதான் பேசுவார். இப்புரட்சிக்காரர்களின் பேச்சைக்கேட்டு இளைஞளுன என் உள்ளத்திலும் அப்போது தேசீய உணர்வும் புரட்சிக் கருத் துக்களும் வேர்விடத் தொடங்கின. அந்தச் சமயத்தில் ஒரு வங்கான இளைஞனும் எங்களுடன் இருந்தான். அவன் அரவிந்தரின் தீவிரச் செயல்களால் ஈர்க்கப்பட்டுப் புதுச் சேரி வந்து தங்கியவன். அப்போது வங்காள ஆளுநராக இருந்த ஒரு வெள்ளையரைச் சுட்டுக் கொல்வதற்காக ஒரு துப்பாக்கியை அந்த இளைஞனுக்குக் கொடுத்துதவினேன் நான் இளமைத் துடிப்பில் அப்போது செய்த பல துணிச்ச லான செயல்களைக் குடும்ப விளக்கின் விருந்தோம்டில்", பகுதியில் ஒரு முதியவர் கூறுவதுபோல் வெளிப்படுத்தி யிருக்கிறேன். என் இளமைத் துடிப்பையும், துணிச்சலை, யும் ஒருமுகப்படுத்திக் கவிதைத் துறையில், திருப்பிவிட்ட வர் பாரதியார்தாம். ஒருநாள் என்வயதுக்கேற்ற நண்பர் சிலருட்ன் அரவிந்தர் தங்கியிருத்த மாடி வீட்டின் கைப்பிடிச் சுவரின் மீது அமர்ந்து புகைப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாரதியாரும் அரவிந்தரும் வேறுசில நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தனர், அவர்கள் வந்தது எனக்குத் தெரியாது.