பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ காட்டியிருக்கிறான் பிரெளனிங். அவனுடைய ஆழ்ந்து அகன்ற அறிவும், நுண்மாண் நுழைபுலமும் படிப்போரை வியப்பில் ஆழ்த்தாமல் இரா. முதுமை என்றவுடன் எல்லாருக்கும் ஒர் அச்சம் ஏற்படுவது வழக்கம். முதுமை வந்ததும் வாழ்க்கையில் நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. சாவைப் பற்றிய சிந்தனை எப்போதும் ஆட்கொள்ளுகிறது. ஆனால் பிரெளனிங், முதுமையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறான். என்னோடு (upg|GoldGle sp outróñ156ir’ (Grow old Along with me) Graśrp ஒருபாடல், அவன் முதுமையை எவ்வாறு வரவேற்கிறான் என்பதை விளக்கிறது. என்னோடு முதுமைபெற வாருங்கள்! வாழ்க்கையின் - உன்னதப் பகுதி இனிமேல்தான். செம்மையான முதுமைக்குப் பயிற்சிக் கூடமே இளமை, நம் காலம் கடவுள் கையில்; நிறைவான வாழ்க்கை. திட்டமிட்டு அவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது, இளமை பாதிக்காட்சி கடவுளை நம்பி எல்லாவற்றையும் எதிர்கொள் அச்சந்தவிர் என்று நம்பிக்கையோடு பாடுகிறான். சாவு ஒரு முதுமைப் போராட்டமாகவே அவனுக்குப் படுகிறது. தனக்குத்தானே அறிவுரை (Prospice) என்ற பாடல் அப்போராட்டத்தை விளக்குகிறது. என் தொண்டையில், உறைபனி! என் முகத்தில் பார்வையை மறைக்கும் மூடுபனி