பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iதுணிவும், செம்மாப்பும், தூய நேரிய உள்ளமும் நிறைந்த பாவேந்தரின் வாழ்வில், மிகச் சுவையான பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றில் பல அவரின் குழந்தையுள்ளத்தின் பான்மையை விளக்குவன. ஒரு சிலவற்றில் அவரின் பொதுமை யுணர்வும் ஒழுங்குணர்வும் பளிச்சிடும்! தமிழத்தின் விடுதலைக்கெனத் தம்மை ஒப்படைத் துக் கொண்டு தொண்டாற்றி, வாழ்ந்து மறைந்த பாவேந்தரின் வாழ்வியல் நடைமுறைகளை ஒருவாறு உணர, மணிச்சுருக்கமாக வரையப் பெற்று வெளி யிடப்பெற்ற பின்வரும் ஒருசில நிகழ்ச்சிகள் துணை செய்யும்! கடந்தகாலத் தென்மொழி'யிதழ்களில், அவ்வப் பொழுது வெளியிடப்பெற்ற சிறுசிறு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கு அடங்கியுள்ளது! சுவைத்து மகிழ்க! -1 - 4. நிகழ்ச்சி மாலை