பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. குயிலே! (பெரும்புலவரான பா வே ந் த ரி ன் பாவை இசைத்து, யான் தரும் பாலையும் பழத்தையும் பெறுக என, குயிலை நோக்கி இசைத்த பா இது! பாவேந்தரின் குயில் மீண்டும் 1958-இல் வெளி வந்த போது, உடன் வந்த பாடல் இது) நாவும் இனிக்க, நறுந்தமிழின் நறவை மாந்தி, நெஞ்சினிக்கக் கூவுங் குயிலே தேமாவின் கோதுண் டிருந்து மலர்மலர்வாய்த் தாவுங் குயிலே! தண்டமிழின் தனித்த சீர்த்திப் பெரும்புலவன் பாவும் இசைத்தே யாங் கொடுக்கும் பாலும் பழமும் பெறுவாயே! ஏடும் மணக்க இளந்தமிழில் இசையும் மணக்கத் தீம்பாடற் பாடுங் குயிலே பழந்தமிழர் பகையும் மறந்தே பணியாற்றித் தேடும் பெருமை திகழ்தற்கே தீம்பண் ணிசைத்துத் தனித்தமிழர் நாடுங் கேட்டே, யாங்கொடுக்கும் நறவுத் தளிரும் பெறுவாயே! நாளும் பயில நற்றமிழ்ப்பா நாட்டுங் குயிலே ! ஒன்றுரைப்பேன், கேளாய் ! சீர்த்தித் தனிநாட்டைக் கேட்டும் மறுப்பார்க் கிந்நாட்டுத் துளும் மிஞ்சா தென்பதையும் தோள்கள் கோடி தாயின்மேல் சூளுற் றதையும் நீகூறிச் - செந்தேன் தினமாப் பெறுவாயே!