28 பிடியும் களிறும்
கொண்டு ஆண்டவன் பாண்டரங்கம் ஆடினன். பாண்டு என்பது வெண்மைக்குப் பெயர். அரங்கம் என்பது கூத் தாடும் இடம். திரிபுரம் வெந்தவிய, எங்கும் நீற்றுமயமாகி வெண்ணிறம் பெற்ற இடத்தையே அரங்கமாகக் கொண்டு இறைவன் ஆடியதால், அதற்குப் பாண்டரங்கம் என்ற பெயர் வந்தது.
இவ்வாறு, மண்டிய அமர் பலவற்றை வென்று, அந்த வலிமையால் நீற்றை அணிந்து பாண்டரங்கக் கூத்தை ஆடியபோதும், உடன் இருந்து தாளம் கொட்டினுள் அம்மை. மூங்கிலைப்போல வழுவழுப்பும் பசுமையும் உடைய தோளுடையவள் எம்பிராட்டி, அனேபோல மெத்தென்றிருக்கும் தோள் அது. அவள் கூந்தலில் வண்டு கள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவள் துரக்கு என்னும் தாளத்தைக் கொட்டினள்.
நவ்வந்துவளுர் இறைவனைப் பார்த்தே சொல் கிருர்; 'இறைவா, மண்டு அமர் பல கடந்து, வலிமையால் நீற்றை அணிந்து பாண்டரங்கக் கூத்தை ஆடியபோது யார் உனக்குத் தாளங்கொட் டிஞர்கள்? உன் கூத்தின் திறம் அறிந்த தேவிதானே கொட்டமுடியும்? பணே (மூங்கில்) போன்ற எழிலையும், அணை (தலையணை) போன்ற மென்மையையும் உடையவள், வண்டு அரற்றும் கூந்தலை உடையவள் ஆகிய பிராட்டி தானே தாளம் போடுவாள்? வேறு யாரால் முடியும்?”
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் utண எழில் அணை மென்ருேள் வண்டு.அரற்றும் கூந்தலாள் வளர்துக்குத் தருவாளோ?
|மேற்சென்று நெருங்கும் பலவகைப் போரை வென்று அந்த வலிமையினல் நீற்றை அணிந்து, பாண்டரங்கம் என்னும் கூத்தை நீ ஆடும்போது, மூங்கிலப்போன்ற