72 பிடியும் களிறும்
மணந்து கொள்வதற்காகப் பலர் முயல்வதைப் பற்றிப் பேச்சு எழுந்தது.
"இவ்வளவு அழகும் அறிவும் உள்ள பெண்ணை மனைவி யாக அடையும் பேறு எந்த ஆடவனுக்கு இருக்கிறதோ, தெரியவில்லை' என்ருள் செவிலி.
தோழி : இனி அவளுக்கென்று புதியவகை ஒருவன் வரப்
போவதில்லை.
செவிலி : இனிமேல் பிறந்து வரப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனல் எங்கே பிறந்திருக்கிருனே, அதுதான் தெரியவில்லை.
தோழி : புதியவகை வரப் போவதில்லை என்றுதான்
சொன்னேன்.
செவிலி : நீ சொல்வது விளங்கவில்லையே!
தோழி : நம்முடைய தலைவியை இன்னும் சிறு பெண் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிருர்கள்.
செவிலி : அவள் சிறு பெண் தான்; ஆனல் தன் பருவத்தை
மிஞ்சிய அறிவுடையவள்.
தோழி : அதைச் சொல்ல வரவில்லை. அவள் அற்புதம்
செய்யும் வன்மை பெற்றிருக்கிருள்.
செவிலி : அற்புதமா? அது என்ன?
தோழி : இந்த நிலத்தில் சில காலமாக மழை பெய்ய .
வில்லை யென்று வைத்துக் கொள்வோம். அப்படி மழை அருமையாகப் போன காலத்தில் நாம்