பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பிரசவ கால ஆலோசனைகள் ஆகின்றன. அதுவரை அது திரவ ரூபமாகவே இருக்கும். அது சூல்பையில் தங்குவதற்கேற்ப, சினைப்பையில் சுரக்கும் ஒருவகை நீர் அப் பையில் நன்கு பரவத் தொடங்குகிறது. இதன் மூலம் கர்ப்பம் உருவாகி வளர வும் வழி அமைத்துக் கொடுக்கப்படுகிறது. கருவுற்ற ஏழாவது நாளிலிருந்தே கருவின் வளர்ச்சி தொடங்கி விடுகிறது. - - சினைக் குழாயில் இரண்டு சினை முட்டைகள் வெளி யாகி அவற்றோடு இரண்டு உயிரணுக்கள் கலந்து கர்ப்பம் உண்டானால், இரட்டைக் குழந்தைகள் (Twins) பிறக்கின்றனர். - . . - ஒரே சினை முட்டையுடன் இரண்டு உயிர் அணுக்கள் கலந்து, கரு உருப்பெறும் போதுதான், இருவேறு உடல் களும், உள்ளத்துணர்ச்சிகள் ஒரே விதமாகவும் கொண்டு இயங்கவல்ல விசித்திரப் படைப்புகளான அபூர்வ சகோதரர்கள் பிறக்கிறார்கள். -- - இரண்டுக்கு மேற்பட்ட அதிசயப்பிறவிகள் பிறக்கும் நிலைக்கும் சினை முட்டைகள், உயிரணுக்களின் கூடுதல் எண்ணிக்கைதாம் காரணமாகின்றன. 'கருத்தரிப்பது என்பது இயற்கையான, விரும்பத். தக்க ஒரு நிகழ்ச்சியாகும்' என்கிறார் ஆர். டபிள்யூ. ஜான்ஸ்டன், தமது பிள்ளைப் பேறு மருத்துவம்' (R. W. Johnstone on 'midwifery’) arsi goto L15pQL spp. பேறுகாலத்திற்குக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்குத் தக்க பணி செய்து வருகிறது நமது அரசாங்கம். உத்தியோகம் பார்க்கும் கர்ப்பிணிகளுக்கும் பல சலுகை கொடுக்கப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் L@io sem grrrl', urrgjærtůı (Health Protection) சோவியத் யூனியனைப்போல இன்னும் விரிந்த அள்வில் பெருகுவதற்கான திட்டங்களும் நம் நாட்டில் கருவில் இருக்கின்றன. . - ★大女