பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. ஆறுமுகம் #5 . ஆணின் ஆண்குறி (Penis) வெளிப்படுத்தும் ஒரு ஜீவ அணு, பெண்ணின் யோனியின் (Vagina) சினைக்குழாயி லுள்ள சினை முட்டையுடன் இவ்வாறு கலப்பதற்குரிய காலசக்தி நாத்பத்தெட்டு மணி அளவுதான் என்றும் கூறப் படுகிறது. இந்தக் கால நிலைக்குள் இரண்டும் இரண்டறக் கலந்து, கருவாக உருவாகி, கருக்குழாயின் வழியாகக் கருப்பைக்குள் (Uterus) நுழைந்து அவ்விடத்தில் தங்கிக் கொள்கிறது. அக்கணத்திலிருந்து கரு உற்பத்தி பெற்று வளரும் இயக்கம் தொடங்குகிறது. (tanual of Embryo jogy by Fı 8zer]. . . பெண்ணிடம் வலது சினைப்பை என்றும் இடது சினைப்பை என்றும் இரண்டு சினைப்பைகள் ovary) இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று பிரதி மாதமும் ஒரு சினை முட்டையை (ovum) வெளியே அனுப்பி வைக்கும். இம்முட்டை மாத விலக்கு நிகழ்ந்த பின் ஏதோ ஒரு குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே காணப்படுமாதலால் அந்நேரத்தில் சினை முட்டை அங்கு தங்கியிருக்கும் பட்சத்தில், கருக்குழலில் அதாவது சினைக்குழாயின் (Fallopian Tube) வழியே நுழையும் உயிரணு அம்முட்டை யுடன் கலந்து கர்ப்பப் பை (uterus)க்குள் பிரிட்டுப் பாய்ந்து தங்கி, 'கரு' Fertilisation) உருப்ப்ெற ஏது உண்டாகின்றது. இந்நிலைதான் கர்ப்பம் (Pregnancy) எனப்படும். - . . . . - - கருப்பையின் உட்புறத்தில் இருக்கும் என்டொ GloiifuJib' (Endometrium) எனும் மெல்லிய ஜவ்வுதான் இக்கருவைத் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும், கரு உருவாகாவிடில், இந்த ஜவ்வு உரிந்து ரத்தத்தோடு ரத்த மாக வெளியே வந்துவிடும். இந்த வகை உதிரப்போக்குத் தான் மாதவிடாய்” என்றும் மாதவிலக்கு (Menstria:tion) என்றும் சொல்லப்படுகிறது. * சுக்கில உயிருடன் இரண்டறக் கலந்துவிட்ட சினை முட்டை கருப்பையை அடைய ஏறக்குறைய ஏழு நாள்கள்