பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பிரசவகால ஆலோசனைகள் காரணமாக அதிகமாகப் பெருத்திருக்கும். மார்பகங் களைச் சுற்றிலும் ஒருவகையான கருமை படர்ந்து காணப் படும்; முலைக்காம்புகள் (Nipples) விரைப்பாகவும் கன மாகவும் பழுப்பு நிறம் கொண்டதாகவும் விளங்கும். இத்தகைய மாற்றங்கள் சிலரது உடல் வாகுக்கு ஏற்ப கருவுற்ற இரண்டாம் வாரத்திலேயே காணப்படுவ தும் உண்டு. அழுத்தம் காரணமாக முலைக்காம்புகளில் gρα56,16)%u 1T<T $a $uò (Secretion of Colostrum) & $u $ தொடங்கும். குத்துவலியும் அடிக்கடி ஏற்படும். 5.。 சாதாரண காலங்களைவிட, கருவுற்ற இக்காலத் திலே உணர்ச்சித் தூண்டுதல்கள் அதிகப்படியாக இருக்கும். . 6. கருப்பை பெரிதாகும்போது, பெண்ணின் மர்ம ஸ்தானம்-சிறுநீர் கழிக்கும் பகுதி-சற்றே வெளித் தள்ளிக் காணப்படும். - கருத்தரித்திருக்கும் நிலை நிர்ணயமாக எப்படியும் பன்னிரண்டு வாரங்கள் பிடிக்கும். இக்கெடு தாண்டியதும் கர்ப்பவதி தகுந்த லேடி டாக்டர்களிடம் சோதனை செய்யப்பட்டு, அவர்களின் யோசனைகளுக்கு ஏற்ப நடந்து, அவர்கள் சொல்லும் மருந்துகளை உட்கொண்டு ஒழுகுதலும் நலம் பயக்கும். உடலையும் சிறு நீரையும் சோதித்துப் பார்க்கும் டாக்டர்கள் கர்ப்ப நிர்ண்யம் பற்றி நிச்சயித்து விடுவார்கள். இப்போது, வயிற்றுக்குறிகளைக் கவனிக்க வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்த பின்னரே வயிறு பெருக்கத் தொடங்குகிறது. இடை எலும்புக் குழியை விட்டு கருப்பை வெளியேறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலா கும். ஆகையால் அதுவரை வயிறு பெரிதாகக் காணப் பட்ாது. × ' ,