பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. ஆறுமுகம் - 2I நான்காம் மாதம்: முன்புறம் இடை எலும்புக்கு மேல் அடிவயிற்றில் கருப்பை மேற்புறம் தட்டுப்படும். - ஐந்தாம் மாதம் : கருப்பை, தொப்புளுக்கு ஒர் அங்குலம் கீழ் வரையில் எழும்பியிருக்கும். ஆறாம் மாதம் : தொப்புளுக்குச் சரியாக இருக்கும். ஏழாம் மாதம் : தொப்புளுக்குமேல் மூன்று விரற்கிடை உயர்ந்திருக்கும். - - - எட்டாம் மாதம் : நெஞ்சுக்குழிக்கும் தொப்புளுக்கும் மத்தியில் இருக்கும். - • - - . . . ஒன்பதாம் மாதம் : விலாப்புறம் எலும்புக்கூடுகளை ஒட்டி உயர்ந்திருக்கும். . பத்தாம் மாதம் : கருப்பை கீழே இறங்கி, எட்டாவது மாதத்திய அளவுக்கு வந்துவிடும். - இவ்வாறு டாக்டர் தி. சே. செள. ராஜன் அவர்கள் தமது வீட்டு வைத்தியர்' எனும் நூலில் விளக்கம் கொடுத்திருக்கிறார். - - பெண்ணின் சினைப் பையினின்றும் வெளிப்படுகிற சினைமுட்டை ஆணின் உயிரணுவுடன் கலந்து சினைக் குழாயை விட்டுக் கிளம்பி, அது கருப்பையை அடைவ தற்குச் சுமார் ஏழு நாள்கள் ஆகும். அவ்வாறு சூல் பையை அடைந்து எவ்விதத் தடங்கலுமில்லாமல் கருப் பையில் தங்கி கரு உருவாகத் தொடங்கும். முதல் வாரத்தில் இறுதிக் கட்டத்தில் கரு, கடுகு போன்ற அளவுடன் இருக்கும். பிறகு நாளாவட்டத்தில் கரு வளரத் தொடங்கிவிடும் . . . முதல் மாதத்தில் கை, கால், தலை என்று வெறும் புள்ளி அமைப்பில் கருப்பிண்டம் காணப்படும்.