பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிரசவ கால ஆலோசனைகள் இரண்டாம் மாதத்தில் இரைப்பை மூக்கு, தொப்புள் கண், விரல்கள் என்று வளர்ச்சி ஏற்படும். இப்போது அதன் அளவு ஒன்று அல்லது ஒன்றரை அங்குலமாகவே இருக்கும். சாதாரணமாகக் கருக் கொண்ட பிண்டம் மூன்றா வது மாதத்தில் ஐந்து முட்டுகளுடன் இருக்கின்றன. சிரசு, இருகால், இருகை என்ற அமைப்பில் அப்பிண்டம்'சூட்சும் பாகங்கள் ஏதும் தெளிவில்லாத நிலையில் இருக்கும். தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலை, மூளை ஆகியவற்றை அத்தாயின் சுகதுக்கங்கள் பாதிக் கின்றன. இவ்விளைவு நஞ்சுக்கொடி வழியே உண்டா கிறது. இருதயம் அமைக்கப்படும். கருவின் அளவு மூன்று அங்குலம். - . . நான்காவது மாதத்தில் கருப்பிண்டத்துக்குச்சம்பூரண மானதோர் உருவம் உண்டாகிவிடும். கருவின் அளவு: ஐந்து அங்குலம். ஆணா, பெண்ணா என்ற வேற்றுமைத் தன்மைகள் இப்போதுதான் உண்டாகும். x- - ஐந்தாம் மாதத்தில் சிசுவின் ஜீவத் துடிப்பு தொடக்க மாகிவிடும். சிசுவின் இருதயம் துடிப்பதை ஐந்தாவது மாதத்தின் கடைசியில் கேட்க முடியும். < * - நன்கு உருவாக்கம் பெற்ற கருப்பிண்டம்-அதாவது சிசு (Mature foltus) ஏழு முதல் ஏழரை பவுண்ட் எடை நிற்கும் என்று உடலியல் அறிஞர்கள் கணித்திருக் கிறார்கள். . - ஆறாவது மாதத்தில் சிசுவின் தசைநார் வளர்ச்சி, ரோமம் முளைத்தல், உடல்பலம், உடல்நிறம், நகம். முளைத்தல், தோல் உருவாதல் போன்ற காரியங்கள் நிகழ் கின்றன. எலும்புகள் உறுதிப்படும். கல்லீரல் வளரும், எடை பதினைந்து பலம். அளவு பதின்மூன்று அங்குலம்.