பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 39. 2. உடை : _நோயனுக்கள் கர்ப்பிணிகளை அண்டலாகாது. ஆகவே அவர்களின் குடியிருப்பும் உடையும் சுத்தமாக இருத்தல் இன்றியமையாததாகும். உடை மெல்லியதாக இருப்பது சில்ாக்கியம். அதனால் காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் உடம்பில் பரவும். வயிற்றைச் சுற்றிப் புடைவையை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், இறுக்க மான நவீன சோளி வகைகளை அணிவதும் தவறு. அவ்வாறு இறுக்கமாகக் கட்டினால், கருவின் வளர்ச்சி. யைத் தடுப்பதுடன், பிரசவத்தை இலகுவாக்கவல்ல சுருங்கிவிரியும் தன்மையுடைய பெல்வுசு (Pelvis) எனும் இடுப்பெலும்பு கோளாறு அடையும். ஏனெனில், இந்த இடுப்பெலும்புக் கூட்டில்தானே கருப்பை உளது!... . ரத்தத்தைச் சாப்பிடுவதாகக் கூறப்படும் நைலான் வகைத் துணிகளை அணிவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கைபிடித் துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொண்டு வியர்வையைத் துடைத்தும், உடனுக்குடன் அவற்றை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தியும், அப்பால் மீண்டும் அவற்றை உபயோகிக்க வேண்டும். வெள்ளைச் சேலைகளை உபயோகிப்பது நல்லது. ஆனால் சுமங்கலிகள் வெள்ளையை உபயோகிக்கத் தயங்கு வார்கள். அப்படியென்றால், கரைக்கட்டில் வேறு வர்ணக் கோடுகள் கொண்ட புடைவைகளைக் கட்டிக் கொள்ளலாமே கறுப்பு, சிவப்புத் துணிகளைப் பயன் படுத்தக்கூடாது. அந்த நிறங்கள் மனத்துக்கு இனியவை அல்ல; பார்வைக்கும் வெறுப்பூட்டுபவை அல்லவா? - இவை தவிர, ஏனைய நிறங்களில் மங்கலாக உள்ள சேலைகளைக் கட்டிக் கொள்ளலாமே! நாட்டுப்புறப் பகுதிகளில் பிரசவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் ரவிக்கைகள் அணிந்து கொள்வதை நிறுத்தி