பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. ஆறுமுகம் 7 பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது. - - இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது: தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல-அமைந்து விடுகிற-அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்குதர்மத்துக்கு-சகிப்புத் தன்மைக்கு-அன்புக்கு-அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும். - - வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்து, கிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண்-பெண் எனும் மகத்தான மெய்ப் பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக-இயங்கும்-அல்லது இயக்கப்படும். பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண்-பெண் என்கிற துரண்டு தலின் கூட்டுறவுதான் வாழ்வு; அதுவேதான் அவனி. மெய்தான்: புவனமே சக்தி சில்ம் வடிவானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா? ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக்கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.