பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் - 95 சுகாதார விதிகளும் போஷாக்கும் நோய்க்குப். பரிகாரம் சொல்லும். பசும்பான்ல அடிக்கடி கொடுக்க வேண்டும். இந்நோய் கண்ட பிள்ளைத்தாச்சிகள் சிகிச் சைக்குரியவர்கள். - பனிக்குடம்-நஞ்சு பனிக்குடநீர் பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாத தாகும். சிசுவை வளரச் செய்யும், அதற்கு அரணாக அமையவும் உவவ வல்லது. பனிக்குட நீர் அரை லிட்டரிலிருந்து ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். நீர்மிகுந்து பெருகினால், ஆபத்து உண்டாகும். மூச்சுக் கஷ்டம், நெஞ்சுவலி போன்ற பல நோய்கள் உண்டாகும். இடுப்பு வலி குறைந்து, பிரசவம் ஏற்படத் தொல்லை ஏற்படும். அக்காலத்தில் பனிக்குடம் உடைந்து, சுகப்பிரசவம் ஆகாது. இந்நீர் குறைந்தாலோ, பனிக் குடம் உறைக்கும் சிசுவுக்கும் இடையே ஜவ்வு மூடிக் கொண்டு ஒர் இணைப்பு ஏற்படக்கூடும். சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். சிசுவின் உடலமைப்பில் குறை ஏற்பட்டு விடும். ஊனம் உண்டாகும். ஆகவே பனிக்குட நீர் அமைப்பில் டாக்டர் பரிசோதனை கண்காணிக்கப்பட வேண்டும். நஞ்சும் நஞ்சுக்கொடியும் சிசுவின் வளர்ச்சிக்கும். பாதுகாவலுக்கும் உரியவை. நஞ்சு ஒரு ராத்தல் எடை இருக்கவேண்டும். கர்ப்பக் குழந்தையின் எடையில் ஆறில் ஒரு பங்கு இருக்கும். குழந்தைக்குத் தேவை. யான ஊட்டம், தாயின் ரத்தத்தினின்றும் இந்த நஞ்சுக் கொடி வழியே செல்லும். கருத்தரிக்கும் போதே கருப்பைச் சுவரில் இக்கொடியும், உருவாகிவிடும். சி. சு. வுக்கு நஞ்சு எல்லாவகையிலும் ஒரு தற்காப்புத் தரும், பிரசவம் ஆனதும்தான் நஞ்சு வெளியாகும். நஞ்சுக் கொடிய்ையும் நஞ்சையும் வெளியேற்றுவதில் மருத்துவம் படித்தவர்கள் கவனமாக இருப்பார்கள். கிராமங்க்ளில் குழந்தையை வெளியே எடுக்கும் மருத்துவச்சிகள் கொடியை புரியாமலோ அவசரப்பட்டோ நஞ்சுக்