பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பிரசவ கால ஆலோசனைகள் யீரல் வேலை செய்தால், உடற்கழிவுகள் அப்புறப்படுத் தப்பட்டுவிடும். - - வியர்வை வரும்படி நடத்தல், நல்ல உணவு, நீர் மலம் கழிதல் பலன் தரும். பார்லித் தண்ணிர், எலுமிச்சம் பழரசம் நல்லவை. சோடாமாவை ஒரு தேக்கரண்டி எடுத்து பாதிகிளாஸ் தண்ணிரில் கலக்கிக் குடிக்கலாம். மயக்கம், குமட்டல் தீரும். அளவுடன் தாம்பூலம் தரிப்பது நல்லது. ஆனால் புகையிலை கூடாது. மூல வியாதி மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால் இந்நோய் வரும். இதனால் ஆசனவாயில் வெடிப்பு, ரத்தம் சொட்டல் எரிச்சல் உண்டாகும். மலச்சிக்கலையும் நீரடைப்பையும் போக்கினால் இவ்வியாதி தீரும். - பச்சை நரம்பு முடிச்சு சுருட்டுதல் சிலருக்குக் கீழ் அங்கப்பகுதிகளிலே ரத்தத் தேக்கம் காரணமாக, பச்சை நரம்புகள் விரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீக்கமாக இருக்கும். கால்களை நீட்டி உயர்த்தி இளைப்பாற வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந் திருக்கக் கூடாது. வயிற்றில் சிலருக்குத் தழும்பு ஏற்படும். நமைச்சல் தோன்றும். இவற்றைப் போக்க, வயிறு, இடுப்பு போன்றவற்றில் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு, சிறுபொழுது கழித்து நீராடலாம் என்பது. ஆயுர்வேத சாஸ்திரத்தின் ஆலோசனை. கிராணி பேதி ரத்தக் குறை நோய் இது. உடல் வெளுக்கும்; உடல் மெலியும்,நாக்குப் புண்ணும் ஏற்படும். வயிறு புடைக்கும். குடல்களில் வாயு தங்கும். கை, கால் வீங்கும். - -