பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 97 இந்நோய்க்குக் காரணங்கள் : 1. அளவு மிஞ்சிய ரத்த அழுத்தம். (high blood pressure) 2. உடல் வீக்கம் 3. மூத்திரநீரில் கூடுதலான பி.சிதம் 4. இழுப்பு 5. தொடர்ந்த தலைவலி 6, மேல் வயிற்றுவலி 7. பார்வைக் குறைவு 8. துரக்கமின்மை இவை காரணங்களாகவும் நோய்க்குரிய அறிகுறி களாகவும் அமைகின்றன. - மேற்கூறிய அடையாளங்களையும் குறைகளையும் அசட்டை செய்தால் இந்நோய் உள்ளுக்குள்ளிருந்து வேலை செய்து தன் உக்கிரத்தை வெளிப்படையாகவும் காட்டத் தொடங்கும். திடீரென்று மயக்கம் போட்டுத் தரையில் விழுந்து விடுவார்கள். உடனே வலிப்பு ஏற்படும். உடம்பு முழுவதும் விரைத்து, முகத்தோற்றும் விகாரப்படும். பிரக்ஞை தவறும்; நுரை தள்ளும். க்ைகால் உதறும். இழுப்பு கார்ணமாகக் காய்ச்சல் உண்டாகும். மரணம் சம்பவிப்பதும் உண்டு. - - - கர்ப்பிணிகள் தொடக்கத்திலேயே-அதாவது இந் நோயின் சிறு அறிகுறி தோன்றியதுமே, தக்க சிகிச்சை செய்து கொண்டால், தாயும் சேயும் நல்லபடியாகப் பிழைத்து எழலாம். கர்ப்ப இசிவின் தொடர்ச்சியாக வலிப்பு நோய் (epilespy), ஹிஸ்டீரியா (Hysteria), விஷமூத்திர நீர்ச் சோகை (uraimia), நீரிழிவு, மூளை விஷஜுரம், விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம். "... வலிப்பு நோய் வருமுன், அதைத் தக்க சிகிச்சை களால் வராமல் தடுக்கவேண்டும். ரத்த அழுத்தம் ஒட்டி யிருந்தாலும், மூத்திரத்தில் புரதம் வெளிப்பட்டாலும், கர்ப்பிணி வீட்டில் அதிகம் நடமாடக்கூடாது. தின் சரி ஒர் அவுன்ஸ் பேதி உப்பை, ஒர் அவுன்ஸ் வெந்நீரில் க்லக்கி ரத்த அழுத்தம் (blood pressure) குறைந்து சரிய்ான நிலைக்கு வரும்வரை பேதிக்குச் சாப்பிட் வேண்டும். பார்லி தண்ணிர், பழரசம், குளுகோஸ் சர்க்கரை கலந்த நீர் ஆகியவற்றையே ஆகாரமாகக் கொள்ள வேண்டும். கால்வியம், வைட்டழின் பி, குளுகோஸ் முதலிய சக்தி களை ஊசிமூலம் (injectiens) உடலில் செலுத்திக் கொண்டு, தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு பி-7 - - - - -