பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பிரசவ கால ஆலோசனைகள் ரத்த அழுத்தத்தை மிதப்படுத்தவேண்டும்!” என்று தம் முடைய பத்துமாதம்’ என்ற நூலில் சொல்கிறார் டாக்டர் எஸ். திரிபுரசுந்தரி அவர்கள் (லக்ஷ்மி"). அமெரிக் காவில் இந்நோய் 500இல் ஒருவருக்கே உண்டாவதாக டாக்டர் ஸ்போக் (Dr. Spock) கூறியுள்ளார். இசிவு நோயின் காரணமாக, கல்லீரல், மூத்திரக் காய்கள், மூளை, நஞ்சுக்கொடி, சுவாச கோசங்கள் போன்றவற்றில் அழற்சி ஏற்படும்; நஞ்சுக்கொடியில் உதிரக்கசிவு உண்டாகி வடியும். ரத்தக்கட்டிகள் ஏற்படும். ரத்தப்போக்கு பிரசவத்தில் வெளிப்படும். ஆகவே இந்நோய் கண் டது ம் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சேர்த்து தக்க சிகிச்சை செய்விக்க வேண்டும். இந்நோயின் சிகிச்சையில் வைத்தியர் ஆலோ சனையில்லாமல், எந்த ஆகாரத்தையும் அல்லது பானத் தையும் கர்ப்பிணிகட்குக் கொடுக்கலாகாது. நோய் முற்றினால் இரண்டு வகையிலும் நஷ்டம் வரும். ஆகவே, வருமுன் காக்கும் பண்பு மிகமிக முக்கியம். - - - கருச் சிதைவு - - தாம்பத்திய உறவில் அளவு. மீறிய ஈடுபாடு காரண மாகவும், தாய்க்கு கிரந்தி முதலிய மேகநோய் இருந் தாலும், கருப்பையைத் தாக்கும் வகையில் அடிபடுவ தாலும், அதிர்ச்சி அடைவதாலும், தந்தைக்கு ரகசிய நோய் தொற்றி அதன் மூலம் தாய்க்கும் அந்நோய் தொற்றி விடுவதாலும், கர்ப்பப்பை தாயின் வயிற்றில் சரிவர அமைப்பு பெறாதிருப்பதாலும், கரு தவறாக வளர்ந்து விடுவதாலும் கருப்பச் சிதைவு ஏற்பட்டு ரத்தப் பெருக்கு உண்டாகும். இதற்கு உடனடிச் சிகிச்சை செய்ய வேண்டும். ஆகவே, கர்ப்பிணிகளுக்கு எந்த நோய் கண்டா லும்,அனுபவ வைத்தியத்தை உசிதமானதற்குக்கையாண்டு சிசுவைப் பாதிக்கும் நிலை ஏற்படும் நோய்களுக்கு உடனடியான வைத்திய சிகிச்சை பெறவேண்டும். தகுந்த மருந்தும் ஆகாரமும் ஓய்வும் கொள்ள வேண்டும். -