பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டிச்சி அம்மாள் வரலாறு

99

இந்த மனோன்மணி அப்போது மாறு வேஷம் தரித்திருந்த போதிலும், மேகத்துக்குள் மறைந்திருக்கிற சந்திரசூரியர்களை அவர்களின் பிரபை காட்டிவிடுவது போல இந்த உத்தமியை அவளுடைய முகக்காந்தி காட்டிவிட்டது. மற்றச் சங்கதிகளெல்லாம் அப்போது கூட இருந்த உங்களுடைய மனுஷருக்குத் தெரியுமானதால், நான் சொல்ல வேண்டுவதில்லை” என்றான். இதைக் கேட்ட உடனே சம்பந்தி முதலியார் மறுபடியும் என்னைத் தழுவிக்கொண்டு சொல்லுகிறார்:- “நீ செய்த உபகாரத்தை நான் ஒருநாளும் மறப்பேனா? என் புத்திரிகை காணாமற் போன உடனே உன் மேலும் சந்தேகம் நினைத்தேன். பிற்பாடு பல காரணங்களால் அந்தச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. என் மகளுக்கும் எங்களுக்கும் பிராண பிக்ஷை கொடுத்துக் காப்பாற்றினாய்; உனக்குத் திரிலோகங்களையும் கொடுத்தாலும் தகும். ஆகிலும் நீ அங்கீகரிக்கும்படியான ஒரு சம்மானத்தை உனக்குச் செய்ய யோசித்திருக்கிறேன்” என்றார். அவரும் மற்றவர்களும் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையெல்லாம் ஞானாம்பாளுடைய ஒரு மந்தஹாசத்துக்குச் சமானமாக நான் நினைக்கவில்லை.




16-ஆம் அதிகாரம்
ஆண்டிச்சியம்மாள் சரித்திரம்
மாமி நாத்திகள் கொடுமை

என்னுடைய ஸ்தோத்திரம் முடிந்தவுடனே, ஞானாம்பாளுக்குத் துணையாகவந்த ஆண்டிச்சி அம்மாளை எல்-