பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத்தண்ணிக்கு வாழ்த்துரை

209

அந்த மாறுபாடு பாளையதார் குடும்பத்தில் ஒருவருக்கும் தெரியாமற் போனதும், பாளையதார் தம்பி கொலை செய்வதற்காக முத்துவீரனிடத்திற் கொடுத்த பிள்ளையை அவன் கொலை செய்யாமல், சாந்தலிங்கம் பிள்ளை வசத்தில் ஒப்புவித்து சாந்தலிங்கம் பிள்ளை தன் சொந்தப்பிள்ளையைப் போல் வளர்த்ததும், அந்த ரகசியம் அநேக வருஷ காலம் பாளையதார் முதலானவர்களுக்குத் தெரியாமலிருந்ததும் சாதாரணமாய் நடக்கக் கூடுமான காரியங்கள் அல்ல. ஆயினும் அவைகளெல்லாம் வாஸ்தவமென்று உங்களுடைய பத்தினிகளின் ஊக்கமான முயற்சியினால் நாம் கண்டுபிடித்துக் கொண்டோம். முக்கியமாகச் சத்தியபுரி சுந்தரத்தண்ணிக்கு நீங்கள் எல்லாரும் கிருதக்ஞர்களா யிருக்கவேண்டும். வசன சாதுரியமாயும் மாதுரியமாயும் மிருதுபாக்ஷிதமாயும் சாரசங்கிரகமாயும் சுந்தரத்தண்ணி நியாயங்களை எடுத்துக் காட்டினபடியால் நாம் உண்மையைக் கண்டு கொள்வது அதிசுலபமாயிருந்தது. இப்படிப்பட்ட நியாயவாதினி உங்களுக்குக் கிடைத்தது உங்களுடைய அதிர்ஷ்ட விசேஷந்தான். ஐரோப்பாவிற் கூடச் சுந்தரத்தண்ணியைப் போல் ஆயிரத்தில் ஒரு ஸ்திரீ அகப்படுவது அருமை. சுந்தரத்தண்ணியைத் தாரமாகப் பெற்ற புருஷன் புருஷனே யல்லாமல் மற்ற ஆண்மக்களெல்லாரும் வீண் மக்கள்தான். அழகும் துக்கமும் உருவெடுத்து வந்தது போல உங்களுடைய ஸ்திரீகள் குழந்தைகள் சகிதமாய் நம்மிடத்தில் வந்து அபயப் பிரதானங் கேட்டதும், அவர்கள் மத்தியில் சுந்தரத்தண்ணி எழுந்து நின்று கொண்டு நியாய வாதஞ் செய்ததும் நம்முடைய புத்தியிலும் அப்போது கூட இருந்தவர்களுடைய புத்தியிலும் நன்றாய்ப் பதிந்து போயிருக்கிறது. அந்தப் பிரகாரம் ஒரு படம் எழுதும்படி உத்தரவு செய்திருக்கிறோம். அது முடிந்தவுடனே உங்களுக்குஞ் சில படங்கள் கொடுக்கப்படும்”” என்றார். பிறகு அவர் தேவராஜப் பிள்ளையை

14