பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

பிரதாப முதலியார் சரித்திரம்

ஞானாம்பாள் அவர்களை நோக்கி ““இத்தனை ஜனங்களுடைய அபேஷைக்கு விரோதம் செய்வது எனக்கு மெய்யாகவே வருத்தமாயிருக்கிறது. ஆனால் என்னாலே கூடாத காரியத்துக்கு நான் என்ன செய்வேன்? அந்தப் பெண்ணை நான் கொள்வதற்கு ஒரு பெரிய பிரதிபந்தமிருக்கிறது. அது ஒருவராலும் நிவர்த்தி செய்யக் கூடாததாயிருக்கிறது”” என்றாள்.

ஜனங்கள் ““அந்தப் பிரதிபந்தம் இன்னதென்று தெரிவித்தால் எங்களுடைய பிராணனைக் கொடுத்தாயினும் அல்லது எங்களுடைய ஆஸ்திகளையெல்லாஞ் செலவழித்தாயினும் அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்கிறோம்”” என்றார்கள்.

ஞானாம்பாள் “””அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்ய ஒருவராலுங் கூடாது. பெண்ணை ஆணாக்கவும் ஆணைப் பெண்ணாக்கவும் எப்படிக்கூடாதோ அப்படியே இதுவுங் கூடாத காரியந்தான். அன்றியும் நீங்கள் கலியாணமில்லாத பிரமசாரியென்று நினைத்து எனக்குக் கலியாணம் செய்விக்க முயலுகிறீர்கள். நான் பிரமசாரியல்ல””” என்றாள்.

ஜனங்கள் “””உங்களுக்கு முன்னமே கலியாணம் நடந்திருந்தாலுங் கூட அந்த ராஜகன்னியை உங்களுக்குத் துதிய விவாகஞ் செய்ய எல்லாரும் சம்மதிக்கிறார்கள். சகல சங்கதிகளையும் நாங்கள் முன்னமே கலந்து பேசிக்கொண்டு தான் உங்களிடத்தில் வந்தோம். ஒரு பெண்ஜாதி யிருக்கும்போது வேறு ஸ்திரீகளை விவாகஞ் செய்வது சாஸ்திரோக்தமே தவிர அசாஸ்திரியம் அல்லவே” என்றார்கள்.

ஞானாம்பாள் ““உங்களுடைய அபிப்பிராயப்படி பல ஸ்திரீ விவாகம் சாஸ்திரோக்தமாக யிருந்தாலும் கொள்ளுகிறவனுடைய சம்மதம் வேண்டாமா?”” என்றாள்.

ஜனங்கள் ””“கொள்ளுகிறவனுடைய சம்மதத்தைக் கேளாமலே, இந்தத் தேசத்தில் கலியாணங்கள் நடப்பது