பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

பிரதாப முதலியார் சரித்திரம்

கிருபை கூர்ந்து யுராஜ ஸ்திரீகள்ரு என்கிற பட்டமுங் கொடுத்து அநேக ஜாகீர்களும் விட்டார்கள். தெய்வானுக்கிரகத்தினாலும் உங்களுடைய ஆசீர்வாத மகிமையினாலும் நாங்கள் சகல சாம்பிராஜ்யங்களும் பெற்றுச் சந்தோஷமாக ஜீவிக்கிறோம். இந்த சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமிஷம் வரையில் ஒரு குறைவும் இல்லாமல் சுக ஜீவிகளா யிருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லாரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்.


முற்றிற்று



கடவுள் வாழ்த்து

அடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங்
கடந்து நின்ற பெரியாளைக் கடுகினுழை சிறியானைத்
தொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க்
படர்ந்தவருள் பிரியானைப் பழிச்சாயோ நாவே [கரியானைப்
பரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே.