பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

பெற்றுள்ளது. எந்த நாவலுக்கும் ஏற்படாத ஓர் அபாயம் முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு ஏற்பட்டது. வேதநாயகம் பிள்ளை தமது கால இயல்புக்கேற்ற தமிழ் நடையில் எழுதிய அந்த நாவலைத் தனித் தமிழ் பெய்து முழுதும் மாற்றி (அதாவது ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ப்பதைப் ’பெருமை முதலியார் வரலாறு’ என மொழி பெயர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி) வெளியிட்டது ஒரு பதிப்பகம். இது தமிழ் எழுத்தாளர்களின பலமான கண்டனத்திற்கு உள்ளாயிற்று. ஓர் எழுத்தாளர் எழுதிய நூல் எந்த நடையில் எப்படி எழுதப்பட்டதோ அந்த நடையில் அப்படியே மக்களுக்கு வழங்கப்படவேண்டும். ஏனென்றால், நடை என்பது அவர் வாழ்ந்த காலத்தையும் சூழ்நிலையையும் காட்டும் கண்ணாடியாகும். நூற்றாண்டு விழா கொண்டாடும் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் பதிப்பித்து, ஆசிரியர் எழுதிய மூல நூலின்படியே வெளியிடப்பட்டுள்ளது. அதற்காகத் தமிழக அரசை நான் அணுகியபோது, அது நிதயுதவி அளித்து என்னை ஊக்குவித்து, இப்பதிப்பு வெளி வரச் செய்தது.

இந்நாவல், நூற்றாண்டு விழாப் பதிப்பாக வெளிவரக் காரணமாய் இருந்த தமிழக முதல் அமைச்சர் மக்கள் திலகம் மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கும், இந்தூலுக்கு அரியதோர் அணிந்துரை நலகிப் பதிப்பைச் சிறப்பித்த கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் எம்.ஏ., பி.எல்.,பிடி.., அவர்களுக்கும் என் மனமார்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். . இம் முயற்சியைத் தமிழுலகம் போற்றி வரவேற்பதாக.

வேதநாயகம் நகர்
ஆவடி, சென்னை - 71
வே. ஞா. ச. இருதயநாதன்.