பக்கம்:பிராயச்சித்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 3 என்னிக்குக் கொத்தா சதையைப் பிடுங்கப் போறதோ -ழரீராமன் துணை, ராபிஸ் கீபிஸ் எங்கேயோ, படித்த ஞாபகம், கடித்தவுடனேயே தலைதுாக்கனும்னு இல்லை யாமே! ரத்தத்திலேயே ஊறி; விஷயம் மீறியபோன பின் ஆள் குலைக்க ஆரம்பிக்கலாமாமே! நெனச்சுப் பார்க்க முடியல் லே. இன்னிக்கு ப்ரசாந்த் துரங்கற சமயம் பார்த்து ரோலியை எங்கானும் கொண்டு போய் விட்டுடனும்! குழந்தை கொஞ்ச நாளைக்கு ஏங்கிப் போவ:ான். ரோவி யும் பாவம்தான். இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான், மன்சைத் திடம் பண்ணிக்க முடியாமல் வளையில் வகையா மாட்டிண்டாச்சு. இடிந்த கோட்டைகளில் அலைந்து கொண்டிருந்த மனம் வேறு சத்தங்கள் கேட்டு மீண்டபோது, தான் வழி மாறி வந்துவிட்டதை உணர்ந்தாள் எங்கே இருக்கோம்? எதிரே தெருவோரம் கும்பல் accident இல்லை, சண்டையா? இல்லை இல்லை. கும்பல் நடுவிலிருந்து புல்லாங்குழல் சத்தம். ஒ. ப்ளாட்ஃபாரம் வித்வான். லேசான கேலி உதட்டோரம் சுழித்தது. ஆனால் அதன் இனிமை பறறியிழுத்தது. யார் இவ்வளவு நன்னா... ருசி யாக என்றுகூட சொல்லும்படி ! ஐயா கொஞ்சம் இடம் விடlங்களா?' அவளுடைய ஆர்வம் கண்டு இடம் விட்டவர், "இங்கே கூட Ladies firstஆ? எனச் சிடுசிடுத்தவர் நடுவே எப்படியோ முண்டியடித்து கூட்டத்தின் முன் அலையில் சேர்ந்துவிடடாள். வாசித்துக்கொண்டிருந்த ஆளையும் பார்த்துவிட்டாள். அவரை எப்படி மறக்க முடியும்? My God ஆள் எதிரே விரித்திருந்த துண்டில் சில்லர்ைகள் பெய் திருந்தன. இன்னும் லேசாக விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தன.