பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பிற்காலச் சோழர் சரித்திரம் யன் மகனாகிய வீரபாண்டியன் ஆவன். அவனது ஆட்சி யின் ஆறாம் ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப்படுங் கல்வெட்டுக்களில் அவன் • சோழன் தலைகொண்ட கோ வீர பாண்டியன்' என்று பெருமையாகக் கூறப்பட்டுள் ளான் 1. ஆகவே, கி. பி. 953-ல் சோழர்க்கும் வீர பாண் டியற்கும் நடைபெற்ற போர் ஒன்றில் பாண்டி வேந்தன் சோழன் ஒருவனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் சோழன் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாகச் சோழன் என்று கூறுகின்றமையால் அவனால் போரில் கொல்லப்பட்ட வன் சோழச் சக்கரவர்த்தியல்லன் என்பதும் சோழர் குடியில் தோன்றிய ஓர் அரசகுமாரனாகவே யிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். அவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. சோழ அரசகுமாரன் ஒருவனை வீரபாண்டியன் முன்னர் நிகழ்ந்த போரில் கொன்றமையாலும், அவனிடமிருந்து பாண்டி நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் சுந்தர சோழன் உள்ளத்தில் பன்னாட்களாக நிலைபெற்றிருந்த மையாலும், இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத் துச் சென்றான். அந்நாட்டிலுள்ள சேவூரில் சுந்தர சோழற்கும் வீரபாண்டியற்கும் பெரும்போர் நடைபெற் றது. அப்போரில் சுந்தர சோழனே வெற்றி எய்தினான். தோல்வியுற்றுப் புறங்காட்டி யோடிய பாண்டி மன்னன் சுரம்புகுந்து ஒளிந்துகொண்டான் 2. அதுபற்றியே, சுந்தர சோழன் ' பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ' என்று வழங்கப் பெற்றனன். இவன் ஆசியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் 3 இவனை ' மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன் ' என்று கூறுவதால் சேவூர்ப் போர் கி. பி. 962 -ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. அப்போர் நிகழ்ச்சி ஆனை 1. S. I. I., Vol. V, No. 455. 2. Travancore Archaeological Series, Vol. III, No. 34, 3. S. I. I., Vol. III, Nos. 114 and 115. [ Verse 63.