பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் 15 மங்கலச் செப்பேடுகளில் 1 சொல்லப்பட்டுள்ளது. அப் போரில் வீரபாண்டியனுக்கு உதவிபுரிதற் பொருட்டுச் சிங்கள நாட்டு மன்னன் நான்காம் மகிந்தன் என்பவன் பெரும் படையனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சிங்கள மன்னன் செய்கையை யுணர்ந்த சுந்தர சோழன், தன்படைத் தலைவனும் கொடும்பாளூர்க் குறு நில மன்னனுமாகிய பராந்தகன் சிறிய வேளான் என்ப வனைப் பெரும் படையுடன் சிங்கள நாட்டிற்கு, கி. பி. 965 -ல் அனுப்பினான். அவ்வாண்டில் அந்நாட்டில் நிகழ்ந்த போரில் அத்தலைவன் உயிர் துறந்தான். அச் செய்தி, ' ஈழத்துப்பட்ட கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான் ' என்ற ஒரு கல்வெட்டுப்பகுதியினால் 2 அறியக் கிடக்கின்றது. ஆகவே, சுந்தர சோழன் ஈழ நாட்டு வேந்த னோடு நிகழ்த்திய போரில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. நான்காம் மகிந்தன் தன் படைத்தலைவன் * சேனா' என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பிச் சோணாட்டுப்படையை எதிர்த்துப் போர்புரியுமாறு செய் தனன் என்றும் அப்போரில் சிங்களப்படை வெற்றி யெய்தவே, சோழ மன்னன் ஈழ மன்னனோடு உடன்படிக்கை செய்துகொண்டு நட்புரிமை பெற்றனன் என்றும் இலங் கைச் சரிதமாகிய மகாவம்சம் கூறுகின்றது 3. ஈழ நாட்டி லுள்ள வெசகிரி என்ற இடத்தில் காணப்படும் மகிந் தனது கல்வெட்டொன்று 4, சேனா என்ற சிங்களப் படைத் தலைவன் தமிழ்ப்படையைப் போரில் வென்ற செய்தியை உறுதிப்படுத்துகின்றது. சுந்தர சோழன்பால் தோல்வியுற்று ஓடியொளிந்த வீர பாண்டியன், மீண்டும் மதுரையம்பதியிலிருந்துகொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினான். பாண்டி நாட்டில் காணப் 1. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 25. 2. S. I. I., Vol. V, No. 980. 3. The Colas, இரண்டாம் பதிப்பு, பக்கம் 154 4. Epigraphia Zeylanica, Vol. I, p. 30.