பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பிற்காலச் சோழர் சரித்திரம் படும் வீரபாண்டியன் ஆட்சியின் 18, 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்1 அவன் கி.பி. 965, 966-ஆம் ஆண்டுகளில் பாண்டி நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. எனவே, சுந்தர சோழன் மறுபடியும் பாண்டி நாட்டின் மேல் படையெடுப்பது இன்றியமையாததாயிற்று. அப் படையெழுச்சியும் கி.பி. 966-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. பாண்டி நாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று போர் நிகழ்த்திய தலைவர்கள் சுந்தர சோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளூர் வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர். அந்நாட்களில் ஆதித்த கரிகாலன் இளைஞனாயிருந்த போதிலும் பெரு வீரத்தோடு போர்புரிந்து வீரபாண்டியனைக் கொன்று வெற்றிமாலை சூடினான். அது பற்றியே அவ்வரசிளங்குமரன் வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்களில்2 கூறப் பட்டுள்ளனன். அப்போரில் கலந்துகொண்டிருந்த தலை வர்களாகிய பூதி விக்கிரமகேசரியும் பார்த்திவேந்திர வர்மனும் தாம் வீரபாண்டியனைத் தலைகொண்டவர்கள் என்று தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளனர்3. அவர்கள் பாண்டி நாட்டுப் போரில் படைத்தலைமை வகித்து அதனை நடத்திய தலைவர்களாதலின் அங்ஙனம் கூறிக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் யாண்டும் காணப்படாமையால் அந்நாடு உடனே சோழர் ஆட்சிக்குட்படுத்தப்படவில்லை என்பது தேற்றம். ஆகவே, சுந்தர சோழன் அவ்வப்போது போரில் வெற்றி பெற்றதோடு அமைந்திருந்தனனேயன்றிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரியவில்லை என்பது நன்கு புலனாகின்றது. 1. T. A. S., Vol. III, No. 23. 2. S. I. I., Vol. III, No. 14 ; Ibid, Vol. VII, Nos. 74 and 800 3. Ibid, Vol. III, Nos. 170, 177 and 179.