பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் 81 அன்றியும், இராசராசசோழன் ஆட்சிக்காலத்துக் கல் வெட்டுக்கள் 1 செம்பியன் மாதேவியாரைக் குறிக்குமிடங் களில் "ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார்" எனவும், " ஸ்ரீ உத்தமசோழதேவர் தங்களாச்சியார் ஸ்ரீ பராந்தகன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன்மாதேவியார்" எனவும் உத்தமசோழனைப் புகழ்ந்து கூறுவதால் ஆதித்த கரிகாலன் உத்தமசோழன் சூழ்ச்சியினால் கொல்லப்படவில்லை என்பது நன்கு தெளியப்படும். இனி, உத்தமசோழன் ஆட்சியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கட்குத் தண்டனை விதிக்கப்படாமல் இராச ராசசோழன் ஆட்சியில் இரண்டாம் ஆண்டிலே விதிக்கப் பட்டிருத்தலால் அக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழ னுக்கும் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் சிலர் கொள்கை. கொலை புரிந்தோருள் ஒருவனுக்கும் அவனைச் சார்ந்தோர்க்கும் கிடைத்த தண்டனை இராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டமை உடையார்குடிக் கல்வெட்டால் அறியப்படுகிறது. அக் கல் வெட்டின் துணைகொண்டு உத்தமசோழன் மீது குற்றங் காண்டல் எங்ஙனம் பொருந்தும் ? மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்புடையவர் யாவர் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவர்க்கும் தண்டனை விதிப்பதற் குள் சில ஆண்டுகள் கழிந்திருத்தல் கூடும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சியும் முடிவெய்தியிருக்கலாம். அத னால் இராசராசசோழன் ஆட்சியில் எஞ்சியோர்க்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தமை இயல்பேயாம். ஆத லால், அக்கொலைபற்றி உத்தம சோழன் ஒருவருக்கும் தண்டனை விதிக்கவில்லை என்று எத்தகைய ஆதாரமுமின்றி எவ்வாறு கூற முடியும் ? சுந்தரசோழன் கி. பி. 969-ல் தன் முதல் மகனாகிய 1. S. I. I., Vol. XIII, Nos. 14, 72, 144, 170 and 332.