பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம சோழன் இனி, இம்மன்னனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டில் வரையப்பெற்ற செப்பேடுகள், சென்னையிலுள்ள பொருட் காட்சிச்சாலையில் இருக்கின்றன. அவற்றுள், வடமொழிப் பகுதி காணாமற் போய்விட்டமையின் தமிழ்ப் பகுதி மாத்திரம் இப்போது உள்ளது. அதன் துணை கொண்டு இவ்வேந்தன் முன்னோர் வரலாற்றை அறிய இயலாது. எனினும், இவன் காலத்துச் செய்திகளுள் சிலவற்றை யும் சோழர்களின் ஆட்சி முறையையும் அதனால் அறிந்து கொள்ளலாம். அன்றியும், பத்தாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் வரிவடிவில் எவ்வாறிருந்தன என்பதை உணர்ந்துகொள்வதற்கு அச்செப்பேடுகள் பெரிதும் பயன் படுவனவாகும். உத்தம சோழனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது செம்பியன்மாதேவி என்னும் ஊரில் காணப் படும் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அவர்களுள் ஐவர் பெயர்கள் அவ்வூரில் ஒரே கல்வெட்டில் குறிக்கப் பட்டிருக்கின்றன. அன்னோர், பட்டன் தானதுங்கி, மழபாடித்தென்னவன்மாதேவி, இருங்கோளர் மகள் வானவன் மாதேவி, விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள், பழு வேட்டரையர் மகள் என்போர்.2 பட்டத்தரசியாக விளங்கி யவள் மூத்த நம்பிராட்டியாகிய திரிபுவனமாதேவியாவள். 3 அன்றியும், பஞ்சவன்மாதேவி, சொன்னமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் என்னும் வேறு மனைவியரும் இருந் தனர். அவர்கள் எல்லோரும், தம் மாமியாகிய செம்பியன் மாதேவி, தஞ்சைஜில்லா நாகப்பட்டினந் 1. S. I. I., Vol. III, No. 128. 2. Ins. 494 of 1925 ; Ins. 298 of 1908. 3. Ins. 488 of 1925 and Ins. 496 of 1925. 4. Ins. 491, 492 and 496 of 1925. இவ்வரசிகளுள் ஒருத்தி மேலே குறிப்பிட்ட பழுவேட்டரையர் மகளாக ஒருகால் இருப்பினும் இருக்கலாம்.