பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பிற்காலச் சோழர் சரித்திரம் தாலூகாவில் செம்பியன்மாதேவி என்னும் ஊரில் 1 எடுப்பித்த திருக்கயிலாயம் என்னும் சிவாலயத்திற்கு நாள்வழிபாட்டிற் கும் திங்கள் விழாக்களுக்கும் பல நிவந்தங்கள் அளித்துள்ள னர். இச்செயலால் அவர்கள் எல்லோரும் தம் கணவனைப் பயந்த மாமியிடத்து எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பது இனிது விளங்கும். இனி, முதல் இராசராசசோழன் ஆட்சியில் கோயிற் காரியங்களும் பிற அறநிலையங்களும் நன்கு நடைபெறு மாறு கண்காணித்துவந்த மதுராந்தகன் கண்டராதித்த சோழன் என்பவன் இவ்வரசனுடைய புதல்வன் ஆவன். 2 இவ்வரசிளங்குமரன், ஐவரடங்கிய ஒரு குழுவுடன் அற நிலையங்களின் கணக்குகளை ஆராய்ந்து வந்தமை கல் வெட்டுக்களால் புலனாகின்றது.3 மலாடு எனவும் சேதி நாடு எனவும் வழங்கிய மலைய மானாட்டில் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட சித்த வடத்தடிகள் என்பான் உத்தமசோழனுக்குத் திறை செலுத்திக்கொண்டு அப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த ஒரு குறு நில மன்னன் ஆவன்.4 மூன்றாங் கிருஷ்ண தேவ னது ஆட்சியின் 17-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றால் அவன் நரசிங்கவர்மன் என்னும் அபிடேகப் பெயருடையவன் என்பதும் வெளியாகின்றது. திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூ காவிலுள்ள கோவந்தபுத்தூரில் காணப்படும் சில கல் 1. செம்பியன் மாதேவி என்பது, உத்தமசோழன் தாயாகிய செம்பியன் மாதேவி தன்பெயரால் அமைத்த ஒரு நகரமாகும். 2. S. I. I. Vol., III, No. 49; Ins. 218 of 1921. 3. Ins. 283 of 1906. 4. Ins. 193 of 1931. 5. Ep. Ind., Vol. VII, pp. 135 & 136.