பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பிற்காலச் சோழர் சரித்திரம் ஆவன்.! அத்திருப்பணி, உத்தமசோழன் ஆட்சியில் நடை பெற்றதாகும். இனி, செம்பியன் மாதேவி கற்றளிகளாக அமைத்த பிறகோயில்கள் விருத்தாசலம், திருகோடிகா,3 தென் குரங்காடுதுறை, செம்பியன்மாதேவி,5 திருவாரூர் அர நெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, 9 திருவக்கரை10 என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்க ளாம். அவற்றுள், முதல் இராசராசசோழன் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி. பி. 1001-ல் இவ்வம்மை திருவக் கரைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்தமையே தன் வாழ்நாளின் இறுதியில் புரிந்த திருப்பணி எனலாம். மற்றும் பல கோயில்களுக்கு இம்மாதேவி புரிந்த தொண்டு கள் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படுகின் றன. விரிவஞ்சி, அவையெல்லாம் ஈண்டு எழுதப்பட வில்லை . முதல் இராசராசசோழன் மகனாகிய கங்கைகொண்ட சோழன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாய முடையார் கோயிலில் கி. பி. 1019-ல் இவ்வம்மையின் படிமம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித் துள்ளான்.11 எனவே, இவ்வம்மை இறைவன் திருவடியை யடைந்த அண்மையிலேயே தெய்வமாகக் கருதிக் கோயிலில் படிமம் வைத்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது. 1. S. I. I., Vol. III, No. 147. 2. Ins. 47 of 1918. 3. Ins. 36 of 1931. 4. S. I. I., Vol. III, No. 144. 5. Ins. 485 of 1925. 6. Ins. 571 of 1904. 7. Ins. 103 of 1926; துருத்தி-குற்றாலம். 8. Ins. 75 of 1926. 9. Ins. 9 of 1914. 10. Ins. 200 of 1904. 11. Ins. 481 of 1925.