பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 115 இடையில் முற்காலத்தில் அமைந்திருந்த ஒரு நாடாகும். அந்நாட்டை மேலைச்சளுக்கியரின் தாயத்தினரான கீழைச் சளுக்கியர் அரசாண்டு வந்தனர். கி. பி. பத்தாம் நூற்றாண் டின் நடுவில் கீழைச்சளுக்கிய அரசகுமாரர்களுக்குள் சிறிது மனவேறுபாடு உண்டாயிற்று. அந்நாளில் மூத்தோன் வழியினனாகிய இரண்டாம் வீமன் மகன் இரண்டாம் அம்ம ராசன் (கி. பி. 945-970) அங்கு அரசாண்டு கொண்டிருந் தான். இளையோன் வழியினனாகிய இரண்டாம் யுத்த மல்லன் மகன் பாதபன் என்பவன் அவ்வாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற கருத்தினனாய் இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவனது உதவிபெற்று, இரண்டாம் அம்மராசனைப் போரில் வென்று நாட்டைக் கவர்ந்து கொண்டு ஆட்சி புரிவானாயினன். அப்போது அம்மராசன் கலிங்க நாட்டிற்கு ஓடிவிட்டானென்று பாதபனுடைய ஆரும் பாகச் செப்பேடுகள் கூறுகின்றன.. . மூத்தோன் வழியினர்க் கும் இளையோன் வழியினர்க்கும் நாட்டின் ஆட்சி யுரிமைபற்றி அடிக்கடி போர்கள் நிகழ்ந்தமையால் கி. பி. 945-ஆம் ஆண்டு முதல் வேங்கி நாட்டில் குழப்பமுங் கலகமும் மிகுந்து கொண்டே வந்தன. பாதபனுடைய ஆட்சிக்குப் பிறகு அவன் தம்பி இரண்டாம் தாழன் முடிசூடி அரசாண்டான். குறு நில மன்னர்களும் அரசியல் அதிகாரிகளும் அவன்பால் பற்றின்றி முரண்பட்டிருத்தலை யுணர்ந்த அம்மராசன் தென்கலிங்க வேந் தனது துணைகொண்டு படையெடுத்துத் தாழனைப் போரிற் கொன்று நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிவானாயினன். இளையோன் வழியினர் ஒருவருமின்றித் தாழனொடு முடி வெய்தினர். கி. பி. 970-ல் அம்மராசனை, அவன் மாற்றாந்தாயின் மகனாகிய தானார்ணவன் என்பான் வடகலிங்க மன்னன் உதவி கொண்டு போரிற் கொன்று தன் தமையன் ஆண்டு வந்த நாட்டைக் கி. பி. 973 வரையில் ஆட்சி புரிந்தான். 1. Ep. Ind., Vol. XIX, p. 146. The Eastern Calukyas of Veng" by Dr. N. Venkataramanayya, p. 186. 2. Ep. Ind., Vol. XIX, No. 24. 3. The Eastern Calukyas of Vengi by Dr. N. Venkatarama nayya, pp. 193 and 202,