பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பிற்காலச் சோழர் சரித்திரம் சூட்டினான். எனினும் தோல்வியுற்ற அவ் வீமன் கி. பி. 1001ல் கலிங்கப் படையின் துணை கொண்டு சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையிலும் துரத்தி வந்தான். அந்நிலையில் இராசராசன் அவனைப் போரிற் கொன்று வேங்கி நாட்டைச் சக்திவர்மனுக்குத் திரும்ப அளித்தனன். அதன் பிறகு தான் அந்நாடு கீழைச் சளுக்கியரது ஆட்சியில் நிலை பெறுவதாயிற்று. அன்றியும் சக்திவர்மனுக்குப் பிறகு அவன் தம்பி விமலாதித்தன் வேங்கி நாட்டிற்கு அரசனாக முடி சூட்டப்பெற வேண்டும் என்ற ஏற்பாடு இராசராசனால் செய்யப்பட்டது. உடனே அவ் விமலாதித்தன் இளவரசுப் பட்டமுங் கட்டப்பெற்றனன். இராசராச சோழன் அத்துணை ஆதரவையும் அன்பையும், அவ் விமலாதித்தன்பாற் காட்டிய மைக்குக் காரணம் தன் புதல்வியாகிய குந்தவைப் பிராட்டியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்திருந்தமையேயாம்? . சக்திவர்மன் வேங்கி மண்டலத்தில் பன்னிருயாண்டு கள் ஆட்சிபுரிந்து கி. பி. 1011-ஆம் ஆண்டில் இறந்தான் . பிறகு, விமலாதித்தன் அந்நாட்டில் முடிசூட்டப்பெற்று அரசாளுவானாயினன் . இராசராச சோழன் வேங்கி நாட்டை வென்று சக்தி வர்மனுக்கு அளித்தனனாயினும் அதனைத் தன் ஆட்சிக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஈண்டு அறியற்பாலது. எனவே, இவன் தன் பாதுகாப்பிற்கும் ஆதரவிற்கும் உட் பட்ட தனி இராச்சியமாகவே வேங்கி நாட்டை மதித்து நடத்தி வந்தனன் என்பது தெள்ளிது. இவ்விரண்டு அரச 1. Historical Sketches of Ancient Deccan, p. 147, 2. Ibid. 3. The Eastern Calukyas of Vengi, page 215. 4. Ep. Ind., Vol. VI, p, 349. இவ் விமலாதித்தன் திருவையாற்று உலோகமாதேவீச் சுரமுடைய மகாதேவர்க்கு 1148 கழஞ்சு எடையுள்ள 8 வெள்ளிக் கலசங்கள் கி. பி 1014-ல் அளித்துள்ள மை அறியத்தக்கது. (S. 1. 1., Vol. V, No. 514.)