பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 119 குடும்பத்தினர்க்கும் மணவினையால் ஏற்பட்ட தொடர்பே இவர்களைப் பிணித்து இத்தகைய நிலையில் அமைதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்படி செய்தது என்பது திண்ணம். இனி இராசராச சோழன் வென்று கைப்பற்றிய நாடு களுள் கலிங்கமும் ஒன்று என்பது இவன் மெய்க்கீர்த்தியால் நன்கறியக்கிடக்கின்றது. கலிங்க நாடு என்பது கோதாவரி யாற்றிற்கும் மகாநதிக்கும் இடையில் கீழ்கடலைச் சார்ந் திருந்த ஒரு நிலப்பரப்பாகும். அஃது இந்நாளில் வட சர்க்கார் என்று வழங்கும் நிலப்பகுதியில் அடங்கியுள்ளது. அந்நாட்டில் மகேந்திரகிரியில் தமிழ் மொழியிலும் வடமொழி யிலும் வரையப்பெற்று ஆண்டு குறிக்கப்படாத இரண்டு கல் வெட்டுக்கள் உள. அவை இராசேந்திர சோழன், விமலா தித்தன் என்னும் குலூத வேந்தன் ஒருவனைப் போரில் வென்று அம்மலையில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்று கூறுகின்றன. 1 ஆனால், அப் போர் நிகழ்ச்சி இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியில் காணப்படவில்லை. ஆகவே, அஃது அவன் பட்டம் பெறுவதற்குமுன், தந்தை யின் ஆட்சிக் காலத்தில் அவன் இளவரசனாயிருந்தபோது நிகழ்ந்ததாதல் வேண்டும். அக்காரணம்பற்றியே அவனது கலிங்க வெற்றி இராசராச சோழனது மெய்க்கீர்த்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது என்பது தெள்ளிது. மகேந்திரகிரிக் கல்வெட்டில் சொல்லப்படும் விமலா தித்தன் யாவன் என்பதும், இராசேந்திரன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவன் நாட்டின்மீது படையெடுத்துச் சென்றமைக்குக் காரணம் யாது என்பதும் இப்போது புலப் படவில்லை. ஒருகால் அக் கலிங்க வேந்தன் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு இழைத்துக்கொண்டு இருந்திருத்தல் கூடும், அதுபற்றி அவனை வென்றடக்கக்கருதி2 இராசேந்திரன் கலிங்கத்தின் 1. S. I. I., Vol. V, Nos. 1351 and 1352. A. S. I., 1912, pp. 171 and 172. கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தன், இராசேந்திர னுடைய தங்கையின் கணவனாதலின் அவனுக்கு உற்றுழி யுதவுவது இவன் கடமையாயிற்று.